வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இணைப்புகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. சில கிரகங்கள் ஒரே ராசியில் அல்லது ஒரே நட்சத்திரத்தில் சந்திக்கும் பொழுது அது மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஜனவரி 2026 அன்று சுக்கிரனும், செவ்வாயும் ஒன்றுக்கொன்று மிக அருகில் வரும். இது ‘கிரகப் போர்’ என்று அழைக்கப்படுகிறது. சுக்கிர பகவான் அன்பு, மகிழ்ச்சி, செல்வத்தின் காரகராகவும், செவ்வாய் பகவான் ஆற்றல், தைரியம், கோபத்தின் காரகராகவும் விளங்குகின்றனர்.
கிரகப்போர் காலம்
இந்த இரண்டு எதிர் குணாதிசயங்கள் கொண்ட கிரகங்களின் ஆற்றல்கள் மோதும் பொழுது தேவையற்ற மன அழுத்தம், தகராறுகள், நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜனவரி 6, 2026 முதல் ஜனவரி 10, 2026 வரை சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். சிறிய விஷயங்களுக்கு கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களின் மோதல்கள், தேவையற்ற பிரச்சனைகள், வாக்குவாதங்கள் எழும் அபாயமும் உள்ளது. எனவே இந்த ஐந்து நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.