வேத ஜோதிடத்தின்படி, நவக்கிரகங்கள் தங்களின் குறிப்பிட்ட கால சுழற்சியின் அடிப்படையில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த கோட்சார மாற்றங்கள் அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. அந்த வகையில் இன்பம், சுகபோகம், காதல், செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபதியான சுக்கிர பகவான், பொதுவாக ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருப்பார்.
தற்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன், வரவிருக்கும் ஜூன் 8 ஆம் தேதி அன்று கடக ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்கு சுக்கிரன் செல்வது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஏற்கனவே இந்த ராசியில் குரு பகவான் வீற்றிருக்கிறார். குருவின் உச்ச வீடான கடகத்தில், அவருடனேயே சுக்கிரன் இணைவதால் இந்த பெயர்ச்சி இரட்டிப்பு பலன்களையும், அபரிமிதமான ஆற்றலையும் தரப்போகிறது.
இந்த சுக்கிர பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் அசுரவளர்ச்சியையும், அதிர்ஷ்ட மழையையும் தரப்போகிறது. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.