கும்ப ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சனி பகவானின் சேர்க்கை சுப பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படுவதால் அதிக பணத்தை சம்பாதிப்பீர்கள். புதிய சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ் அல்லது பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த அரசு ஒப்பந்தங்கள், புதிய ஆர்டர்கள், கூட்டாளிகள் கிடைக்கலாம். லாபம் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். நிதி நிலைமை மேம்படும். வங்கி இருப்பு உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)