Weekly Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி தான்.! ரொம்ப கவனமா இருங்க.!

Published : Nov 09, 2025, 04:27 PM IST

Dhanusu Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
வார ராசிப்பலன்கள் - தனுசு

தனுசு ராசி நேயர்களே, இந்த வாரத்தின் ஆரம்ப நாட்களில் மனதளவில் ஒருவித சோர்வு அல்லது குழப்பம் நிலவலாம். சனி ராகுவின் தாக்கத்தால் உங்கள் இலக்குகளை அடைவதற்கான தன்னம்பிக்கை மற்றும் உத்வேகம் அதிகரிக்கும். நவம்பர் 9 முதல் புதன் பகவான் பின்னோக்கி செல்வதால் தகவல் தொடர்பு மற்றும் பண விஷயங்களில் குழப்பங்கள் நேரலாம். விரய ஸ்தானமான 12 வது இடத்தில் சூரியன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கலாம். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல் நன்கு ஆலோசித்த பின்னர் செயல்பட வேண்டியது அவசியம்.

நிதி நிலைமை:

விரய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன் கொடுத்தல் வாங்குதலை தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். கணக்குகளை சரிபார்த்து வரவு செலவு திட்டத்தை மீறாமல் இருப்பது நல்லது. பெரிய முதலீடுகள் குறித்து அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பழைய நிதி திட்டங்களை மறுபரிசீலனை செய்வது நல்லது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் பிற பண பரிவர்த்தனைகளின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கல்வி:

புதனின் பின்னோக்கிய சஞ்சாரத்தால் கல்வியில் கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக மாணவர்களின் விமர்சனங்கள் அல்லது கிண்டல்களை தவிர்க்கவும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறுவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படலாம். வெளியூர் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படலாம்.

ஆரோக்கியம்:

அதிக பணிச்சுமை காரணமாக உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். செரிமானக் கோளாறுகள் அல்லது சிறிய உடல் உபாதைகள் நேரிடலாம். அவற்றை அலட்சியம் செய்ய வேண்டாம். தியானம், யோகா, இயற்கையான நடைப்பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்வது மூலம் மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

தொழில் மற்றும் வியாபாரம்:

தகவல் தொடர்பு குழப்பங்கள் அல்லது வேலையில் சிறிய தாமதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, வேலையை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம். புதிய வாய்ப்புகள் அல்லது ஒப்பந்தங்கள் எடுப்பதற்கு முன்னர் முழுமையாக விசாரித்து அதன் பின்னர் முடிவெடுக்கவும். கூட்டாளிகளுடன் இணக்கமாக செல்ல வேண்டியது அவசியம். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டுகளைப் பெறும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உறவுகளில் உணர்ச்சிபூர்வமான பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சிறு தவறான புரிதல்கள் கூட பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மனைவி மற்றும் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது உறவை பலப்படுத்தும்.

பரிகாரம்:

உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் சிறந்த சிரமங்கள் குறைவதற்கு சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடலாம். வியாழக்கிழமைகளில் குருவின் ஸ்தோத்திரத்தை உச்சரித்து தட்சிணாமூர்த்தியை வழிபடவும். ஏழைகள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வது நேர்மறை பலன்களைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories