Mercury Transit 2026: புதன் பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு சிக்கல்.! அடிமேல் அடி விழப்போகுது.! பரிகாரங்கள் என்ன?

Published : May 27, 2026, 04:04 PM ISTUpdated : May 27, 2026, 04:06 PM IST

Mercury Transit 2026 Warning for 4 Zodiac Signs: மே 29 புதன் தனது சொந்த ராசியான மிதுனத்திற்குள் நுழைகிறது. இந்த பெயர்ச்சியால், குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் சவால்களைச் சந்திக்க நேரிடும். அதனால், அவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

PREV
15
Mercury Transit 2026

நமது சிந்தனை மற்றும் பேச்சுத்திறனுக்கு காரணமான கிரகம் புதன். ஜோதிட சாஸ்திரப்படி, புதன் ஒரு ராசியில் வலுவாக இருப்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வரும் மே 29 அன்று, புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த கிரக மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட எச்சரிக்கை தேவை. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.

Sani Peyarchi 2026: 138 நாட்கள் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 5 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!

25
கடகம்

கடக ராசிக்கு 12-ம் வீட்டில் புதன் நுழைவதால், தேவையற்ற செலவுகள், அதிக உழைப்பு, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை அமையும். தூக்கமின்மையால் மனரீதியாக சோர்வடைவீர்கள். சக ஊழியர்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்வதற்கு முன் எச்சரிக்கையாக இருங்கள். நிதி முதலீடு அல்லது தொழில் விரிவாக்கத்திற்கு இது சரியான நேரமல்ல.

பரிகாரம்: புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை தானம் செய்யுங்கள்.

Monthly Horoscope: ஜூன் மாதம் உருவாகும் 4 ராஜயோகங்கள்.! வறுமை நீங்கி கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.!

35
மகரம்

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் புதன் இருப்பதால், வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சதி நடக்க வாய்ப்புள்ளது. சக ஊழியர்களுடனான கருத்து வேறுபாடுகளால் மன உளைச்சல் அடைவீர்கள். தேவையற்ற செலவுகளால் நிதி நிலையில் சரிவு ஏற்படலாம். இந்த நேரத்தில் ஒழுக்கம் மிக முக்கியம், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பரிகாரம்: புதன்கிழமை விரதம் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை தானமாக வழங்கவும்.

Guru Peyarchi 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் & பரிகாரங்கள்

45
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 8-ம் வீட்டில் புதன் நுழைவதால், வாழ்க்கையில் சில திடீர் மாற்றங்கள் ஏற்படும். இத்தனை நாள் சேமித்த பணம் பனிக்கட்டி போல கரையும். இதனால் நிதி நெருக்கடி உண்டாகும். குடும்பத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது, எனவே புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள். அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் கருத்துக்களை அன்பாக வெளிப்படுத்துங்கள்.

பரிகாரம்: புதன்கிழமை புதன் பகவானுக்குரிய மந்திரத்தை உச்சரிக்கவும். பச்சை பயிறு தானம் செய்யவும்.

55
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இது ஏற்ற இறக்கமான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் நிதி விஷயங்களில் யோசித்து முடிவெடுங்கள். முதலீடு செய்வதற்கு முன் நூறு முறை யோசியுங்கள். அன்புக்குரியவர்களிடமிருந்து விலக நேரிடலாம், எனவே மென்மையாகப் பேசுங்கள். புதனின் வருகை உறவுகளிலும் தொழிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

பரிகாரம்: ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதை ஏசியாநெட் நியூஸ் உறுதிப்படுத்தவில்லை.)

Read more Photos on
click me!

Recommended Stories