வேத ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், துணிச்சல், ஆற்றல் மற்றும் செயல்திறனை குறிக்கும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய், ஆகஸ்ட் 8-ம் தேதி அதிகாலை 3.48 மணிக்கு மிதுன ராசியில் சந்திரனுடன் இணைகிறது. இந்த அரிய கிரகச் சேர்க்கையால் 'மகாலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த யோகம் சுமார் இரண்டரை நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து ராசியினருக்கும் இதன் பலன்கள் கிடைத்தாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.