வேத ஜோதிடத்தில் புதன் பகவான் பேச்சு, அறிவு, படிப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், வசதி, கலை, காதல், திருமண இன்பம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் காரகராவார். விஷ்ணுவின் அம்சமான புதன் பகவானும், லட்சுமியின் அம்சமான சுக்கிரனும் ஒரே ராசியில் இணையும்போது, லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.
இது செல்வத்தையும், ஞானத்தையும் ஒருசேர அள்ளித்தரும் சுப யோகமாக இது கருதப்படுகிறது. துலாம் ராசியானது சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதால், இந்த யோகம் மேலும் வலுப்பெற்று, சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களைத் தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.