வேத ஜோதிடத்தில் மனதை ஆளும் கிரகமாக சந்திரன் கருதப்படுகிறார். மிகக் குறுகிய காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் கிரகமும் சந்திரன்தான். இதன் காரணமாக, பிற கிரகங்களுடன் இணையும் ஒவ்வொரு முறையும் பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அவற்றின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமாக வெளிப்படும்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை 6 மணியளவில் சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே அதே ராசியில் கேது சஞ்சரித்து வருவதால், இந்த இரு கிரகங்களின் இணைவால் கிரகண யோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் இந்த யோகம் சவால்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகக் கருதப்படுகிறது. இதன் தாக்கம் ஆகஸ்ட் 14 வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் குறிப்பாக பணம், உடல்நலம், குடும்ப உறவுகள் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
Gajakesari Yoga : குருவின் அருள் + சந்திரனின் பலம்... கஜகேசரி யோகத்தால் பவர்ஹவுஸ் ஆக மாறும் 5 ராசிகள் என்னென்ன?