அடுத்தடுத்து பிரச்சனை.. வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா? 'உப்பு' வைத்து ஒரே '1' பரிகாரம் செய்ங்க!!  

Published : Nov 15, 2024, 09:45 AM ISTUpdated : Nov 15, 2024, 09:50 AM IST

Uppu Pariharam : வீட்டில் இருக்கும் எல்லா  பிரச்சனைகளையும் தீர்க்க உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என இங்கு காணலாம்.

PREV
15
அடுத்தடுத்து பிரச்சனை.. வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா? 'உப்பு' வைத்து ஒரே '1' பரிகாரம் செய்ங்க!!  
Uppu Pariharam In Tamil

 வாஸ்து சாஸ்திரம் பண்டைய காலத்தில் இருந்தே மக்களோடு இருந்து வருகிறது. அதன் முக்கியத்துவம் குறித்து தனியாக சொல்ல வேண்டியதில்லை. வாஸ்து பார்த்து கட்டுகிற வீட்டில் நன்மைகள் பெருகும். ஆனால் சில வாஸ்து விஷயங்களை சரியாக செய்வது வீட்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய உதவும். அதற்கு சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களுடைய குடும்பத்தில்  அண்ணன்-தங்கை, அண்ணன்-தம்பி ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அல்லது கணவன்-மனைவிக்கு அடிக்கடி சண்டை வந்தால் வாஸ்துவை கவனிக்க வேண்டும். 

25
Uppu Pariharam In Tamil

சில வாஸ்து பரிகாரங்களை செய்வதன் மூலமாக  வீட்டில் நிலவும் தினசரி சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபடலாம். தினமும் சண்டையிடும் நபரிடம் இருந்து இந்த பரிகாரத்தை தொடங்கலாம். அடிக்கடி சண்டை போடும் நபரின் தலையணைனுக்கு கீழே சின்ன கல் உப்பு வைக்க வேண்டும். இதை செய்த கொஞ்ச நாள்களுக்கு பின் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். 

இதையும் படிங்க:  கல் உப்பை வீட்டில் 'இந்த' இடத்தில் வச்சு பாருங்க.. பணம் அதிகம் சேரும்..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

35
Uppu Pariharam In Tamil

வாஸ்து சாஸ்திரங்களின் படி, உங்களுடைய வீட்டில் யாருக்காவது மோசமான வகையில் நோய் ஏற்பட்டால் அது கெட்ட கண் திருஷ்டியாக இருக்கலாம். இதனால்   குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களுடைய படுக்கைக்கு அருகாமையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு போட்டு வைப்பது நல்லது. இதை வைக்கும்போது ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் வைக்கும் படுக்கைக்கு அருகில் இருக்கும் திசை வடக்கு நோக்கி இருப்பது முக்கியம். இப்படி செய்வதால் உங்களுடைய குடும்பத்திலுள்ள நோயாளி மெல்ல குணமடைவார். விரைவில் முழுவதுமாக அந்த  நோயிலிருந்தும் குணமடையவும் வாய்ப்புள்ளது. ஆனால் மருத்துவரையும் நீங்கள் அணுகி அடுத்தடுத்த விவரங்களை கேட்க வேண்டும். 

45
Uppu Pariharam In Tamil

உப்பு பரிகாரங்கள்: 

மறந்தும் யாருக்கும் மாலையில் உப்பு கொடுக்க வேண்டாம். இதனால் உங்களுக்கு பொருளாதாரப்  பிரச்சனைகள் வரக் கூடும். எப்போதும்
தேவையான அளவில் மட்டுமே உப்பை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் நிதி பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். 

இதையும் படிங்க: Astro Tips : குறையாத செல்வத்திற்கு அற்புதமான கிராம்பு பரிகாரம்.. உடனே செய்ங்க...!

55
Uppu Pariharam In Tamil

நிதி பெருக! 

குளியலறையில் எப்போதும் கொஞ்சம் கல் உப்பு வையுங்கள். இதுவே உங்களை எல்லா நிதி பிரச்சனையில் இருந்தும் காக்கும். திருமணம் ஆகாதவர்வர்கள் என்றால் குளிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து குளிக்க வேண்டும். நாள்தோறும் இந்த வாஸ்து பரிகாரத்தை செய்தால் அவருக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

கெட்ட கனவுகள் நீங்க! 

கெட்ட கனவுகளை தூக்கம் கலைவதை தடுக்க இந்த பரிகாரம் செய்யலாம். நாள்தோறும் தூங்கும் போது   தலையணைக்கு பக்கத்தில் கொஞ்சம் உப்பை வைத்துவிட்டு தூங்கலாம். இப்படி செய்வதால் துர்சொப்பனங்கள் நீங்கும். நல்ல தூக்கம் வரும்.

Read more Photos on
click me!

Recommended Stories