
ஜோதிடத்தில் ஒரு கிரகம் இருக்கும் இடத்திலிருந்து 1,4,7,10 ஆகிய வீடுகள் ‘கேந்திர ஸ்தானங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கேந்திர வீடுகளில் இரண்டு முக்கிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரி கோணத்தில் அல்லது எதிர் எதிர் கோணத்தில் 180 டிகிரி கோணத்தில் நின்று பார்க்கும் பொழுது ‘கேந்திர திருஷ்டி யோகம்’ உருவாகிறது. குறிப்பாக குரு மற்றும் சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இந்த யோகத்தை உருவாக்கும் பொழுது அதன் பலன்கள் மிகவும் சுபமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் அமைகின்றன.
நவம்பர் 3, 2025 அன்று குரு பகவானும் சுக்கிர பகவானும் ஒன்றுக்கொன்று கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரித்து வலுவான கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர். குரு பகவான் ஞானம், கல்வி, செல்வம், சுப நிகழ்வுகள், குழந்தைகள், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். சுக்கிர பகவான் காதல், திருமணம், ஆடம்பரம், வசதிகள், கலை, அழகு, பணம், வாகனம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் பார்வை காரணமாக சில ராசிக்காரர்கள் வாழ்வில் செழிப்பு, மகிழ்ச்சி, உறவுகளில் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பெற உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)