குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: சுத்து போடும் குருவின் பார்வை; எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும்!!

First Published Jul 27, 2024, 11:28 AM IST

குருபகவான் வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குருவின் பயணம், பார்வை, வக்ர சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. யாருக்கெல்லாம் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்

குருபகவான்  பத்தாம் பாவமான தொழில், கர்மா ஸ்தானம் என்ற இடத்தில் பயணம் செய்கிறார். குரு கோசாரத்தில் பத்தில் வந்தால் பாதகமா.? சாதகமா.? என்றால் 75 சதவிதம் பேர் நன்மைகளை அடைந்து இருப்பார்கள். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானங்களின் மீது விழுகிறது. குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள்.வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார்.தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். குரு 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் வழக்குகள் முற்றிலும் அகலும்.

கன்னி

குருபகவான் உங்கள் ராசிக்கு ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை, தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களில் பயணம் செய்கிறார். ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும்.நீண்ட காலமா வாட்டி வதைத்த  நோய்கள் விலகும். குருவின் பொன்னான பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது.  ஐந்தாம் பார்வையாக குரு உங்கள் ராசியை பார்க்கிறார் புது முயற்சிகள் கை கூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அள்ளி எடுக்க தயாராகுங்கள்.

Latest Videos


துலாம்

குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.  குரு பகவான் துலாம் ராசிக்கு 8 ஆம் வீட்டில் வரும் பொழுது கெடுதலை செய்ய மாட்டார். கன்னி ராசியில் இருக்கும் குருபகவான் 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட சுபகாரியங்கள் மளமளவென நடைபெறும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் பொருளாதார நிலை உயரும். வங்கி சேமிப்புகள் உயரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். 4 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள். மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். செய்யும் தொழிலில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் அதிகரிக்கும். வேலையில் உள்ள அலைச்சல் காரணமாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும் கவனம் தேவை.

விருச்சிகம்

குருபகவான் ஏழாம் பாவமான   திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை,    காதல் ஆகிய காரகங்களில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது.
குரு பகவான் தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை  பார்வையிடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். குரு பகவான் பார்வையால் சுபகாரியம் நடைபெறும். 2025ஆம் ஆண்டிற்குள் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். திடீர் அதிர்ஷ்டம் வந்து திக்குமுக்காட வைக்கப்போகிறது. 

click me!