
நம் முன்னோர்கள் காலம் தொட்டு பின்பற்றி வரும் ஆன்மீக நடைமுறைகளில் 'கண் திருஷ்டி' அல்லது 'திருஷ்டி தோஷம்' என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக நம்பப்படுகிறது. மனிதர்களின் பொறாமை கலந்த பார்வை, பேராசை மற்றும் அதீத வியப்பு ஆகியவை ஒருவரின் வெற்றிகளையும், நிம்மதியான வாழ்வையும் மறைமுகமாகப் பாதிக்கக்கூடும் என்பது ஐதீகம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களின் தலைமைப் பண்புகள், தனித்துவமான திறமைகள் மற்றும் உழைப்பு ஆகியவை இயல்பாகவே மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதால், இவர்கள் மற்றவர்களை விட எளிதில் கண் திருஷ்டிக்கு ஆளாக நேரிடுகிறது.அத்தகைய தாக்கம் அதிகம் காணப்படும் ஐந்து ராசிகள் மற்றும் அதற்கான ஜோதிட காரணங்கள் என்னவென்பதை விரிவாகப் பார்ப்போம்.
இதையும் படிங்க : குண்டா இருக்குறவங்க இந்த கோயிலுக்கு போக முடியாது! அமலுக்கு வந்த தடை உத்தரவு!
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எங்கு சென்றாலும் தங்களது இயல்பான தலைமைப் பண்பாலும், கம்பீரத்தாலும் தனித்துத் தெரிவார்கள். எந்தவொரு சவாலான சூழலையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் இவர்களின் ஆளுமைத் திறன் பலரையும் வியக்க வைக்கும். ஆனால், இவர்களின் இந்த பிரகாசமான குணமும், புகழும் சிலருக்கு பொறாமையை ஏற்படுத்திவிடும். இயல்பாகவே சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால், பிறரின் எதிர்மறை பார்வைகளும் பொறாமை அலைகளும் இவர்களை வெகுவாகப் பாதித்து, மன உளைச்சலையும் எதிர்பாராத தடைகளையும் உருவாக்கக்கூடும்.
இதையும் படிங்க : Jnana Siddhi Yoga : அள்ளிக்கொடுக்கும் கேது! ஞான சித்தி யோகத்தால் டக்குனு டாப்புக்கு போகும் 5 ராசிகள்!
"எதை நினைக்கிறார்களோ அதை சாதித்தே தீருவது" என்ற உறுதிகொண்டவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். இவர்களிடம் மோதும் எவரும் எளிதில் வெற்றி பெற முடியாது. இவர்களின் உயரமும், வெற்றிகளைத் தொடர்ந்து குவிப்பதும் பலரால் சகித்துக் கொள்ள முடியாததாக மாறுகிறது. மற்றவர்கள் அடைய முடியாத உயரங்களை இவர்கள் எளிதாக எட்டுவதைக் காணும் போது ஏற்படும் பொறாமைப் பார்வை, இவர்களுக்கு மறைமுகமான கண் திருஷ்டி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் சில நேரங்களில் தொடர் அலைச்சலும் தேவையற்ற சிக்கல்களும் உருவாகலாம்.
இதையும் படிங்க : Chicken : ஜூலை 31 முதல் தமிழகத்தில் சிக்கன் கிடைக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
துலாம் ராசியினர் எப்போதுமே எதிலும் நேர்த்தியாகவும், அழகாகவும், சமநிலையோடும் செயல்படக் கூடியவர்கள். இவர்களின் பேச்சாற்றல் மற்றும் பழகுமுறை சுற்றியிருப்பவர்களை எளிதில் ரசிக்கச் செய்யும்; வியக்க வைக்கும். ஆனால், இவர்களது இந்த கலைநயமிக்க மற்றும் வசீகரமான குணாதிசயமே பலருக்குப் பொறாமைக்கான காரணமாக மாறிவிடுகிறது. எல்லாவற்றிலும் நேர்மறையாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் இவர்களின் மீது விழும் தீய பார்வைகள், இவர்களின் மன அமைதியைக் குலைத்துவிடும் வல்லமை கொண்டவை.
இதையும் படிங்க : Pani Puri History : மகாபாரத காலத்தில் பானி பூரி! கண்டுபிடிச்சு பரிமாறிய திரௌபதி!
சனி பகவானை அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள், தங்களது அயராத உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறி வருபவர்கள். எத்தகைய கடினமான சூழலிலும் நேர்மறையாகச் சிந்திக்கக் கூடிய இவர்களின் அற்புதமான ஆற்றல் மற்றவர்களுக்கு வியப்பைத் தந்தாலும், சிலருக்கு அது எரிச்சலையும் பொறாமையையும் வரவழைக்கும். இவர்களின் உழைப்பிற்கான பலனும் உயர்வும் மற்றவர்களின் கண்களை உறுத்துவதால், இவர்கள் கடுமையான கண் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : Mutton vs Chicken Liver : மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? உடலுக்கு அதிக சத்து தருவது எது?
நவக்கிரகங்களின் தளபதியான செவ்வாயை ராசி அதிபதியாகவும், நெருப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டதாகவும் விளங்கும் மேஷ ராசிக்காரர்கள், எதைக் செய்தாலும் அதில் அதீத வேகத்தையும் தீவிரத்தையும் காட்டுவார்கள். இவர்களுடைய தைரியமும், எந்தவொரு செயலையும் உடனுக்குடன் செய்து முடிக்கும் திறனும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் அதேவேளையில், பொறாமையையும் உடனடியாகச் சம்பாதித்துக் கொடுக்கும். புதிய முயற்சிகள், தொழில் தொடங்குதல் அல்லது போட்டிகளில் வெற்றி பெறுதல் போன்றவற்றில் மேஷ ராசியினர் எப்போதும் முதல் இடத்தில் இருக்க விரும்புவார்கள். இவர்களின் இந்தப் பிரகாசமான எழுச்சியும், எதைக் கண்டபடியும் பின்வாங்காத துணிச்சலும் பலரின் கண்களை உறுத்துவதால், மற்றவர்களின் தீய பார்வையும் பொறாமை கலந்த எண்ணங்களும் இவர்களை மிக எளிதில் தாக்கிச் செல்லும்.
இதையும் படிங்க : House Construction : 900 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு பட்ஜெட் பிளான் இதோ!