குபேரனின் திசையில் வீடு கட்டுங்க; செல்வம் பெருகும்!!
இந்து மதத்தில் குபேரன் செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாக கருதப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் இவர் ஒன்பது செல்வங்களின் கடவுள் ஆவார். குபேரன் வசிக்கும் வீட்டில் ஒருபோதும் பணத்திற்கு பற்றாக்குறையே வராது. பொதுவாக குபேர கடவுள் இயந்திர வடிவில் வழிபட்டப்படுகிறார். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் புதிதாக வீடு கட்ட போகிறீர்கள் என்றால், அது செல்வத்தின் கடவுளான குபேரனின் திசையில் கட்டுங்கள். அப்படி கட்டுவதன் மூலம் குபேரன் உங்கள் வீட்டில் வசிப்பார். மேலும் அதனால் உங்களது வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். இதுதவிர, வீட்டில் செல்வம் மற்றும் செழிப்பு பெருகும்.
25
செல்வத்தின் கடவுளான குபேரனின் திசை எது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, செல்வத்தின் கடவுளான குபேரன் வீட்டின் வடகிழக்கு திசையில் வசிக்கிறார். வீட்டில் இந்த திசையை வடகிழக்கு மூலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் வீட்டில் இந்த திசையில் தான் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.
உண்மையில் வடகிழக்கு திசை அல்லது வடகிழக்கு மூலையில் வீடு கட்டுவது மங்களகரமாக கருதப்படுகிறது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. இந்த திசையில் வீடு கட்டினால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும். கூடுதலாக வீட்டில் செல்வம் செழிக்கும் பணம் பற்றாக்குறை வராது. இன்னும் சொல்லப் போனால் இந்த திசையில் வீடு அல்லது வீட்டின் பெட்டகம் இருந்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வடகிழக்கு திசையில் இருந்தால் அது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. மேலும் இந்த திசையில் கட்டப்பட்டால் வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
வீட்டில் இந்த திசையில் பூஜை அறை இருந்தால் அது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் கனமான எந்தவொரு பொருளையும் வைக்க வேண்டாம். இந்த திசையில் குபேர யந்திரத்தை வைக்கவும். நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தால் இந்த திசையில் குபேர யந்திரத்தை வைப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
55
நினைவில் கொள்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் வடக்கிழங்கு திசையில் படிக்கட்டுகள் ஒருபோதும் கட்ட வேண்டாம். மேலும் இந்த திசையில் நீங்கள் காலணிகள் மற்றும் சிறப்புகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இந்த திசையில் குளியல் அல்லது கழிப்பறையை கட்டவும் வேண்டாம்.