Astrology: சுக்கிர பார்வை வந்துவிட்டது… இந்த 3 ராசிகளுக்கு இனி கடனே இருக்காது! பண மழை கொட்டித்தீர்க்குமாம்.!

Published : May 09, 2026, 11:28 AM IST

ஜோதிடத்தில் சுக்கிரனின் சாதகமான பார்வையால் 3 ராசிகளுக்கு வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் யோகம் உருவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில், இவர்களின் பணவரவு அதிகரித்து, கடன் சுமைகள் குறைந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். 

PREV
15
வீடு, வாகனம், நகை, சொத்து சேர்க்கும் யோகம்

ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், வசதி, அழகு, ஆடம்பரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கும் முக்கிய கிரகமாகக் கருதப்படுகிறார். சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கையில் பணவரவு அதிகரிப்பதுடன், வீடு, வாகனம், நகை, சொத்து சேர்க்கும் யோகமும் உருவாகும். தற்போதைய சுக்கிர பார்வை ரிஷபம், கன்னி, மகரம் ராசிகளுக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது என்று ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். கடன் சுமையால் அவதிப்பட்டவர்களுக்கு இந்த காலம் நிம்மதியைத் தரும், பணவரவு அதிகரித்து சேமிப்பு உயர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மே மாத முடிவில் இருந்து தொடங்கும் இந்த ஜாக்பாட் 6 மாதங்கலுக்கு தொடரும்.

25
ரிஷப ராசி – சுக்கிரனின் அதிர்ஷ்டம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அதிபதி கிரகமாக இருப்பதால் இந்த காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக அமையும். நீண்ட நாட்களாக இருந்த பண நெருக்கடி படிப்படியாக குறையும். எதிர்பாராத வகையில் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வங்கி கடன் அல்லது நிதி உதவி தேவைப்பட்டவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். இதுவரை அடைக்க முடியாமல் இருந்த கடன்களை அடைக்கும் சூழல் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு தங்க நகை வாங்கும் யோகம் ஏற்படும். புதிய வீடு வாங்குவது அல்லது நிலம் முதலீடு செய்வது போன்ற முயற்சிகளும் வெற்றி பெறும்.

35
கன்னி ராசி – வாழ்க்கையில் பெரிய மாற்றம்

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பார்வையால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். வேலை மற்றும் தொழிலில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் அதிகம். சொத்து தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறைந்து அமைதி உருவாகும். இதுவரை தடைபட்டிருந்த வீடு கட்டும் திட்டம் மீண்டும் தொடங்கலாம். இந்த காலத்தில் சேமிப்பு அதிகரிக்கும். புதிய நகைகள் வாங்கும் யோகம் உருவாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். உடல்நலமும் நல்ல நிலையில் இருக்கும்.

45
மகர ராசி – வாழ்க்கையை மாற்றும் பலன்கள்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பார்வை வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு நல்ல பலன்களை தரும். நீண்ட நாட்களாக காத்திருந்த பணம் கைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் பெரிய வளர்ச்சி கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு உள்ளது. பழைய கடன்கள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும். வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் சேர்க்கும் யோகம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும், வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

55
சுக்கிரன் அருள் கிடைக்க என்ன செய்யலாம்?
  • வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்யலாம்.
  • வெள்ளை நிற ஆடைகள் அணிவது நல்லது.
  • ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு.
  • பெண்களுக்கு தேவையான பொருட்கள் தானம் கொடுத்தால் சுக்கிரன் அருள் அதிகரிக்கும்.

சுக்கிரனின் இந்த சாதகமான பார்வையால் ரிஷபம், கன்னி, மகரம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணவரவு, சொத்து சேர்க்கை மற்றும் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த காலத்தை சரியான முயற்சிகளுடன் பயன்படுத்தினால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியும் செல்வமும் நிலவும்.

Read more Photos on
click me!

Recommended Stories