நெருப்பு தத்துவ ராசியான தனுசு ராசிக்காரர்கள், நேர்மைக்கும் எதையும் வெளிப்படையாகப் பேசுவதற்கும் பெயர் பெற்றவர்கள். "நான் இருக்கிறேன், கவலைப்படாதீர்கள்" என்று அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டு, பின்னர் அந்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றத் துடிப்பார்கள். இதனால் மற்றவர்களின் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகளில் தலையிட்டு, இறுதியில் இவர்களே கெட்டப் பெயரைச் சம்பாதிப்பார்கள். குருவின் ஆதிக்கம் இவர்களைப் பெரிய மனிதராகக் காட்ட நினைக்கும். ஆனால், எல்லா இடங்களிலும் பஞ்சாயத்து செய்யப் போனால் சொந்த நிம்மதி கெடும் என்பதை இவர்கள் உணர வேண்டும்.