இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், விவசாயிகளின் பாசனத் தேவைகளுக்கு தடையற்ற மின்சார வசதியை உறுதி செய்வதாகும். இதன் மூலம், மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை 70% முதல் 90% வரை மானியத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 80% அளவிற்கு மானியம் வழங்கப்படுகிறது.
பொதுப்பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியமமும், இதர விவசாயிகளுக்கு 60% மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. 5 HP திறன் கொண்ட இயந்திரம் 3,14,088 ரூபாய்க்கும், 7.5 HP திறன் கொண்ட இயந்திரம் - 4,42,113 ரூபாய்க்கும், 10 HP திறன் கொண்ட மோட்டார் 5,41,347 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.