பூங்கா மேலாளர் லட்சுமணன் தலைமையில் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சி, நீலகிரி காலநிலைக்கு இந்த பயிர் எவ்வாறு பொருந்தும் என மதிப்பீடு செய்யும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. கருப்பு கேரட் சாதாரண கேரட்டுகளைப் போலவே 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும் என்பதால், இதன் உற்பத்தி திறன் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வடமாநிலங்களில் இந்த கருப்பு கேரட் ‘கஞ்சி’, ‘ஹல்வா’, கேக் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிறத்திலும், சுவையிலும், ஊட்டச்சத்திலும் தனித்தன்மை கொண்ட இக்கேரட், நீலகிரியில் உற்பத்தி ஆன பின்னர் உள்ளூர் சந்தையிலும் புதிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.