Farmer Training: விவசாயிகளுக்கு செம சான்ஸ்.! அட்டகாசமான 4 தொழில் பயிற்சிகள்.! அரிய வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாமே!

Published : Nov 15, 2025, 09:58 AM IST

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் 4 முக்கிய பயிற்சிகளை நடத்துகிறது. முருங்கை மதிப்புக்கூட்டல், மாட்டுச் சாண பொருள்கள் தயாரிப்பு, நுண் கீரைகள் வளர்ப்பு, லாபகரமான ஆடு வளர்ப்பு பயற்சியில் பங்கேற்கவும்.

PREV
15
உழவர் திறன் வளர்க்கும் நான்கு சிறப்பு பயிற்சிகள்!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உழவர் பயிற்சி மையம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் நவம்பர் மாதத்தில் நான்கு முக்கியமான தொழிற்பயிற்சிகளை நடத்த உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டல் முறைகள், மற்றும் லாபகரமான கால்நடை மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் மூலம், இப்பகுதி விவசாயிகள் தொழில் திறனையும், தொழில் வாய்ப்புகளையும் அதிகரிக்க இந்த மையம் முனைப்பு காட்டுகிறது.

25
நவம்பர் மாத சிறப்பு பயிற்சிகள்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உழவர் பயிற்சி மையம் இந்த பயிற்சி நடக்கிறது.

 18-ம் தேதி – “முருங்கை மதிப்புக்கூட்டல்” பயிற்சி

முருங்கை இன்றைய காலத்தில் ‘சூப்பர் ஃபுட்’ என அழைக்கப்படுகிறது. இதன் இலை, காய், விதை, பொடி போன்றவற்றை மதிப்புக்கூட்டல் செய்து பல்வேறு பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவது குறித்து இந்த பயிற்சியில் விரிவாக கற்பிக்கப்படுகின்றது.

  1. முருங்கை பொடி, மதுக்கூட்டு, காப்ஸூல் தயாரிப்பு
  2. சிறு தொழிலுக்கான இயந்திரங்கள், முதலீடு, வருமானம்
  3. விற்பனை வழிகள் மற்றும் சந்தை தேவை

19-ம் தேதி – “மாட்டுச் சாணத்திலிருந்து பலவிதமான பொருள்கள் தயாரிப்பு”

மாட்டுச் சாணம் விவசாயத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு பொருட்களை உருவாக்க பயன்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் மற்றும் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில் இது.

  • சாணக் கட்டை, ஜவுளி, அகர்பத்தி, சக்தி கல்லு தயாரிப்பு
  • இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் பக்கவிளைவில்லா தயாரிப்புகள்
  • சந்தை மற்றும் வீட்டுத் தொழில் வாய்ப்புகள்
35
25-ம் தேதி – “நுண் கீரைகள் (Microgreens) வளர்ப்பு & சந்தைப்படுத்தல்”

ஆரோக்கிய உணவுகளில் அதிக தேவை பெறும் மைக்ரோ கிரீன்ஸ் வளர்ப்பை குறைந்த இடத்தில், குறைந்த நாட்களில் லாபகரமாக செய்யலாம்.

  • மைக்ரோ கிரீன்ஸ் வகைகள், விதை தேர்வு
  • தட்டுகளில் வளர்ப்பு முறை, நீர் மேலாண்மை, விளைச்சல்
  • ஹோட்டல்கள், ஆர்கானிக் மார்க்கெட்டுகள், ஆன்லைன் விற்பனை வாய்ப்புகள்

29-ம் தேதி – “லாபகரமான ஆடு வளர்ப்பு”

ஆடு வளர்ப்பு கிராமப்புறங்களில் நிலையான வருமானம் தரக்கூடிய முக்கிய தொழில்.

சரியான இனத்தேர்வு, தீவன மேலாண்மை

கொட்டகை அமைப்பு, நோய் தடுப்பு

சந்தை விலை, விற்பனை முறைகள் மற்றும் ஆண்டு வருமான மதிப்பீடு

45
ஏன் இந்த பயிற்சிகள் முக்கியம்?
  1. குறைந்த செலவில் துவக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள்
  2. மதிப்புக்கூட்டலால் அதிக லாபம்
  3. நவீன விவசாயம் & புறக்குறு தொழில்கள் பற்றிய தெளிவான பயிற்சி
  4. தனி தொழில் துவங்க விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு

இப்பயிற்சிகளில் எதையும் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு கட்டாயமாகும். இடங்கள் குறைவாக உள்ளதால், விரைந்து பதிவு செய்யலாம். தொடர்புக்கு: செல்: 94885 75716

55
சிவகங்கை விவசாயிகளுக்கள் பயன்படுத்திக்கொள்ளவும்

சிவகங்கை விவசாயிகள் மற்றும் தொழில் ஆர்வலர்களுக்கு இந்த நான்கு பயிற்சிகளும் மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். உங்களது விவசாய வருமானத்தை பல்மடங்கு உயர்த்தும் திறன் கொண்ட இப்பயிற்சிகளில் பங்கேற்காது விடாதீர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories