இந்நிகழ்ச்சி, கடந்த ஜூன் மாதம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவ்வாண்டின் இரண்டாவது பெரிய நிகழ்வாக நடைபெறுகிறது. அந்நிகழ்வில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது இந்த திருவிழாவில் வேளாண்மை,
தோட்டக்கலை, விலங்கியல், மீன்வளம், உணவு பதப்படுத்தல், பால் உற்பத்தி (ஆவின்), பட்டு வளர்ச்சி, வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு துறைகள் பங்கேற்கின்றன. அதோடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பாரம்பரிய உணவுத் தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல தனியார் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன