லிப்ட் கேட்டு கொடுக்காததால் அரை போதை ஆசாமிகள் வெறிச்செயல்... தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூரம்!!

By sathish kFirst Published May 13, 2019, 10:40 AM IST
Highlights

இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு கொடுக்க மறுத்ததால், அரை போதை ஆசாமிகள் இருசக்கர இளைஞரை இருவர் கத்தியால் குத்தியும் அவரது காதை அறுத்தும் பின்னர் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு கொடுக்க மறுத்ததால், அரை போதை ஆசாமிகள் இருசக்கர இளைஞரை இருவர் கத்தியால் குத்தியும் அவரது காதை அறுத்தும் பின்னர் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். நிகழ்ச்சியை தொடங்கி சிறிது நேரம் ஆன நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக பால் மற்றும் தயிர் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பி வரும் வழியில் சரக்கு போதையில் தள்ளாடிக்கொண்டு வந்த இரண்டு பேர், அந்த சாலையில் வரும் வாகன ஓட்டுனர்களிடம் லிப்ட் கேட்டு கொண்டுள்ளனர். எந்த வாகனமும் நிற்காமல் சென்று வந்துள்ளது. இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தங்களை இருசக்கர வாகனத்தில் மின்னல் கிராமம் அழைத்துச் சென்று இறக்கிவிடும்படி தட்சிணாமூர்த்தியிடம் கேட்டுள்ளனர்.

பின்னர் தான் ஒரு அவசர வேலையாக செல்ல வேண்டியுள்ளதனால் உங்களை அழைத்துச் செல்ல முடியாது என மறுத்துள்ளார் தட்சிணா மூர்த்தி. இதையடுத்து ஆத்திரமடைந்த இருவர் தட்சணாமூர்த்தியை தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு, பின்பு காதை அறுத்து, தலையில் கல்லை போட்டு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

பலத்த காயங்களுடன்  வலியால் அலறித் துடித்துக்கொண்டிருந்த  தட்சிணாமூர்த்தியை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் மீட்டு அரக்கோணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தட்சிணாமூர்த்தி உயிரிழந்துள்ளார். 

click me!