கணவர் நன்கு கவனித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரம் !! 2 ஆவது மனைவியின் கழுத்தை அறுத்த முதல் மனைவி !!

Published : May 13, 2019, 09:12 AM IST
கணவர் நன்கு கவனித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரம் !!  2 ஆவது மனைவியின் கழுத்தை அறுத்த  முதல் மனைவி !!

சுருக்கம்

கணவர் அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட தகராறில் 2-வது மனைவியின் கழுத்தை அறுத்த முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்தவர் முகம்மது ரஷீத். இவர், செங்குன்றத்தை அடுத்த பாலவாயலில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், வங்காள தேசத்தை சேர்ந்த சுராகாத்தூண் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு  இரு குழந்தைகள் உள்ளனர்.

சுராகாத்தூணின் உறவுப்பெண் ஜெரினா பேகம்  என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக  அவரை வங்க தேசத்தில் இருந்து கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அழைத்து வந்தார் சுராகாத்தூண்.. ஆனால் அவருக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சுராகாத்தூண், எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. எனவே எனது கணவரை நீ, 2-வது திருமணம் செய்துகொள்” என ஜெரினாபேகத்திடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை வந்த சில மாதங்களிலேயே ஜெரினாபேகத்தை முகமது ரஷீத் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெஷ்மி(5) என்ற மகள் உள்ளார். தற்போது ஜெரினாபேகம் 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

ஆனால் திருமணத்துக்கு பிறகு முகமது ரஷீத் 2-வது மனைவி ஜெரினாபேகம் மீது அதிக பாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று காலை முகமது ரஷீத் வேலைக்கு சென்று விட்டார். வழக்கம்போல் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுராகாத்தூண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெரினாபேகத்தின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெரினாபேகம் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து போலீசார், சுராகாத்தூணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் கர்ப்பிணி என்றும் பாராமல் கணவரின் 2-வது மனைவியின் கழுத்தை முதல் மனைவி அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!