நான் அனுபவிக்காத உன்னை எவனும் அனுபவிக்க கூடாது.. ஜெயிலில் இருந்து வந்ததும் வெறியை தீர்த்துக் கொண்ட சேடிஸ்ட் .

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2021, 9:43 AM IST
Highlights

இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த வியாழக்கிழமை அந்த நபர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று யாரும் எதிர்பாராத நிலையில், அந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

தனக்கு தொடர்ந்து பாலியல் சித்திரவதை செய்வதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் சிறைக்கு சென்ற நபர் விடுதலையாகி வந்து அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும், காவல்துறையும் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, அந்த வரிசையில், ஒரு இளைஞன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக கூறி பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசாரும் புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் ஜாமீனில் வெளிவந்த அந்த நபர் தன்னை சிறைக்கு அனுப்பிய பெண்ணை பழிக்குப் பழி தீர்த்துள்ளார். இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. சாகர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு நபர் தனது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். யாரும் இல்லாத நேரங்களில் அந்தப் பெண்ணிடம் முரட்டுத்தனமாக பாலியல் தொல்லை கொடுத்தும் வந்துள்ளார். அந்த இளைஞரின் நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் எல்லை மீறியது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த இளைஞர் மீது  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த வியாழக்கிழமை அந்த நபர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று யாரும் எதிர்பாராத நிலையில், அந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்த நபரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மீது கற்களை வீசி தாக்கிவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்நிலையில் அந்த பெண்ணின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
 

click me!