கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி.. போலீசில் பகீர் வாக்குமூலம்.!

By vinoth kumarFirst Published Oct 20, 2021, 7:52 PM IST
Highlights

அவர் இருக்கும் வரையில் நாம்  உல்லாச வாழ்க்கை வாழ முடியாது. எனவே அவரைதீர்த்து விடலாம் என்று கள்ள காதலன் சிவசங்கரிடம் கூறியுள்ளார்.கடந்த 17ம் தேதி இரவு, மது குடிப்பதற்காக வெளியே சென்ற மாரப்பனை சிவசங்கர் அழைத்து சென்று அவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூரைச் சேர்ந்தவர் மாரப்பன்(45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடை பக்கம் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மாரப்பனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மாரப்பனின் மனைவி குண்டம்மாளிடம் விசாரணை நடத்தியபோது  முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், குண்டம்மாள் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இருவரையும்  போலீசார் கைது செய்தனர்.  பின்னர், குண்டம்மாள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- குண்டம்மாளுக்கும், மாரப்பனுக்கும் திருமணம் நடந்து 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மாரப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குண்டமாளுக்கும், ராயக்கோட்டை சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த சிவசங்கர் (31) என்ற விவசாயிக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனிமையில், அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை  கண்டித்துள்ளார். 

இதனால் அவர் இருக்கும் வரையில் நாம்  உல்லாச வாழ்க்கை வாழ முடியாது. எனவே அவரைதீர்த்து விடலாம் என்று கள்ள காதலன் சிவசங்கரிடம் கூறியுள்ளார்.கடந்த 17ம் தேதி இரவு, மது குடிப்பதற்காக வெளியே சென்ற மாரப்பனை சிவசங்கர் அழைத்து சென்று அவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த குண்டம்மாள் மது போதையில்  இருந்த தனது கணவர் மாரப்பனை, பின்புற தலையில்  இரும்புகம்பியால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து மறுநாள், காணாமல் போன தனது கணவரை தேடியதாகவும், அதில் தனதுகணவர் உடல் மதுக்கடை அருகில் கிடந்ததாக குண்டம்மாள் தெரிவித்துள்ளார். தன்னிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்து விட்டு தனது கணவர் சென்றதாகவும், பின்னர் மது போதையில் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும், அனைவரையும் நாடமாடி நம்ப வைத்துள்ளார். ஆனால், அவரது தலையில் இருந்த காயத்தை கொண்டு அவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததை கண்டுபிடித்து என்னையும் பிடித்து விட்டனர் என தெரிவித்துள்ளார். 

click me!