எந்நேரமும் குடிபோதையில் மனைவிக்கு டார்ச்சர்.. ஆத்திரத்தில் கணவனை கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொன்ற பயங்கரம்.!

By vinoth kumarFirst Published Aug 29, 2021, 7:08 PM IST
Highlights

எனது கணவர் கூலி வேலைக்கு செல்வார். அதில், கிடைக்கும் பணத்தை குடும்ப செலவுக்கு தருவதில்லை. அந்த பணத்தில்  மது அருந்திவிட்டு என்னையும் என் மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால், மனவேதனையில் இருந்த நான் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டுவிட்டு மது போதையில் படுத்திருந்த  அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன் 

குடிபோதையில் அடித்து துன்புறுத்திய கணவரை மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வேலகவுண்டம்பட்டி இளநகர் அருந்தியர் தெருவை சேர்ந்தவர் ரகுபதி (31). பெயிண்டர் இவரது மனைவி அருணா இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் கடந்த 26ம் தேதி இரவு ரகுபதி வெளியே சென்றுவிட்டு வந்துள்ளார். பின்னர், வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கிய ரகுபதி காலை உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 பிரேத பரிசோதனை அறிக்கையில் ரகுபதியின் கழுத்து பகுதியில் காயம் இருப்பது தெரியவந்து. இதுகுறித்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், மனைவி அருணா  முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 

அப்போது, அவர் போலீசாரிடம் கூறுகையில்;- எனது கணவர் கூலி வேலைக்கு செல்வார். அதில், கிடைக்கும் பணத்தை குடும்ப செலவுக்கு தருவதில்லை. அந்த பணத்தில்  மது அருந்திவிட்டு என்னையும் என் மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால், மனவேதனையில் இருந்த நான் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டுவிட்டு மது போதையில் படுத்திருந்த  அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தாலி கட்டிய கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!