மரத்தில் கட்டி வைத்து கணவன் கண் எதிரில் மனைவி பாலியல் வன்புணர்வு.. மாந்தோப்பில் நள்ளிரவில் பயங்கரம்.

Published : Mar 28, 2022, 06:59 PM IST
மரத்தில் கட்டி வைத்து கணவன் கண் எதிரில் மனைவி பாலியல் வன்புணர்வு.. மாந்தோப்பில் நள்ளிரவில் பயங்கரம்.

சுருக்கம்

பின்னர் நடந்தவற்றை வெளியில் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவதாக என மிரட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. பின்னர் அந்தப் பெண் மரத்தில் கட்டப்பட்டிருந்த தன் கணவரின் கட்டுக்களை அவிழ்த்துவிட்ட இருவரும் தங்கள் கிராமத்திற்கு திரும்பினர்.

மரத்தில் கட்டிப்போட்டு கணவன் கண் எதிரில்  மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பத்து பேரில் இருவர் சிறுவர்கள் ஆவர். கடந்த வாரம் இரவு பாதிக்கப்பட்ட பெண் தாய் வீட்டிலிருந்து கணவனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பது போல் நடித்து  கற்பழிப்பு செய்தல், காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது போன்ற எண்ணற்ற வழிகளில் பெண்கள் கொடுமைகள் அனுபவித்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்களை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் தாய் வீட்டில் இருந்து கணவருடன் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை கும்பலொன்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் நைமண்டி காவல் நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை இந்த கொடூரம் நடந்தது. இளைஞர் ஒருவர் தனது மனைவி ஜெரினாவை ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) நைமண்டி கொட்வாலி பகுதியின் கீழ் பாபா சாலைக்கு அருகில் உள்ள பெண்ணின் தாய் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது  இருட்டான பகுதியில் நின்றிருந்த ஒரு கும்பல் அந்த தம்பதியினரை வழிமறித்ததுடன், அந்த இளைஞரை பிடித்து மரத்தில் கட்டிப்போட்டது. பின்னர் கணவன் கண்ணெதிரில் அப்பெண்ணை மாமர தோட்டத்தில் வைத்து அந்த கும்பல் கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. தன்னை விட்டு விடும் படி அந்த பெண் எவ்வளவோ கதறியும் அந்த கும்பல் அதை பொருட்படுத்தவில்லை. தன் கண் எதிரில் மனைவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை பார்த்து கணவன் கண்ணீர் விட்டு கதறினார் ஆனாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த பெண்ணை அந்த கும்பல் நள்ளிரவு வரை மாறி மாறி அனுபவித்தது.  

பின்னர் நடந்தவற்றை வெளியில் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவதாக என மிரட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. பின்னர் அந்தப் பெண் மரத்தில் கட்டப்பட்டிருந்த தன் கணவரின் கட்டுக்களை அவிழ்த்துவிட்ட இருவரும் தங்கள் கிராமத்திற்கு திரும்பினர். பின்னர் தங்களுக்கு நடந்த கொடூரம் குறித்து கணவன் மனைவி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் தகவலின்படி 4 பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மீதமுள்ளவர்கள் அந்த பெண்ணின் கைகால்களை பிடித்து குற்றவாலிகளுக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர்கள்  அனைவரும் குடி போதையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!