விருதுநகரில் பயங்கரம்.. குடிகார கணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி துடிதுடிக்க கொன்ற மனைவி.!

Published : Oct 22, 2021, 03:59 PM ISTUpdated : Oct 22, 2021, 04:01 PM IST
விருதுநகரில் பயங்கரம்.. குடிகார கணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி துடிதுடிக்க கொன்ற மனைவி.!

சுருக்கம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (45). ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜாராம் குடிபழக்கத்திற்கு அடிமையானார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டார். இதனால், அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குடிபழக்கத்திற்கு அடிமையான கணவனை ஆத்திரத்தில் மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (45). ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜாராம் குடிபழக்கத்திற்கு அடிமையானார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டார். இதனால், அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராஜாராம் மனைவியிடம் சண்டை போட்டார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் ராஜாராமை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயம் ஏற்பட்ட ராஜாராம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜாராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை, மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!