கட்டிலில் கட்டிப்புரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. அப்புறம் நடந்த கூத்த பாருங்க

By vinoth kumarFirst Published Jan 11, 2022, 9:14 AM IST
Highlights

ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் சேர்ந்து கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவரை சரமாரியாக கத்தியால் குத்திய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள கோபுரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). லாரி டிரைவர். ராஜ்குமாரின் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எஸ்.டி. மங்காடு பகுதியில் ஒரு வீட்டின் மேல் மாடியில் கடந்த 3 மாதமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜ்குமார் மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர், சிறிது நேரத்தில் அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் ராஜ்குமாரின் மனைவியும், அவரது கள்ளக்காதலனும் உல்லாசமாக இருந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார். பின்னர், கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். 

இதையும் படிங்க;- லாட்ஜில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. ஜட்டியுடன் தப்பியோடிய 2 இளைஞர்கள்.. அரைகுறை ஆடைகளுடன் 3 பெண்கள்.!

இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் சேர்ந்து கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;-  25 நாட்களில் கசந்து போன திருமண வாழ்க்கை.. கணவனை போட்டு தள்ள கூலிப்படையை ஏவிய மனைவி.. இறுதியில் நடந்தது என்ன?

இதையும் படிங்க;- 'உல்லாச வீடியோவை கணவருக்கு அனுப்பி விடுவேன்'.. பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த காவலர் கைது.!

இச்சம்பவம்  தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி ராஜ்குமாரின் மனைவி கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கணவரை தாக்கிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் தலைமறைவாகி உள்ளதால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

click me!