மயக்க மருந்து கொடுத்து கணவர் செய்த காரியம்... அந்தரங்க பகுதி, மார்பு உட்பட 16 இடங்களில் சூடு வைத்த கொடூரம்..!

By vinoth kumarFirst Published Jun 30, 2021, 4:42 PM IST
Highlights

மனைவிக்கு தெரியாமல் கள்ளக்காதலியுடன் குடித்தனம் நடத்தி வரும் கணவன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது உடல் முழுவதும் 16 இடங்களில் சூடு போட்டு சித்தரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவிக்கு தெரியாமல் கள்ளக்காதலியுடன் குடித்தனம் நடத்தி வரும் கணவன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது உடல் முழுவதும் 16 இடங்களில் சூடு போட்டு சித்தரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்தில் பழனிசாமி என்பவரின் மகன் பாண்டியன் என்பவருக்கும், பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முதல் மனைவி இறந்ததை மறைத்து கலைவாணியை திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் மனைவி கலைவாணிக்கு தெரியவந்ததையடுத்து, இதுகுறித்து கேட்ட போது கணவர் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

இதனிடையே, தனது கணவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக பென்னாகரம் அடுத்த நெருப்பூரை சேர்ந்த  திருமணமான கவிதா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்வு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், காதலியின் பேச்சைக் கேட்டு கலைவாணியை வேறு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி கலைவாணி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால்,  தாய் வீட்டிற்கு துரத்தி உள்ளார். பின்னர், உறவினர் சமாதானம் செய்து வைத்து கணவருடன் அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவர் பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர்கள் கலைவாணிக்கு வலுக்கட்டாயமாக குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். இதனால் கலைவாணி மயக்க நிலையில் இருந்துள்ளார். அப்போது அவருடைய கை, கால், மார்பு மற்றும் பிறப்பு உறுப்பு உள்பட உடல் முழுவதும் 16 இடங்களில் சூடு வைத்து பாண்டியன் துன்புறுத்தியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்க கூடாது என்பதற்காக கை, கால்களை கட்டி வைத்து, வாயில் துணி வைத்து இறுக்கமாக அடைத்துள்ளனர். பின்னர் சுமார் 1 மணி நேரம் கழித்து அவர்களே கயிற்றை அகற்றிவிட்டு, இது சம்மந்தமாக யாரிடமாவது கூறினால் உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்கள்.

இதையடுத்து தனது கணவர் வீட்டில் யாரும் இல்லாதபோது கலைவாணி தனது தாய் வீட்டிற்கு தப்பி சென்று அங்கு பெற்றோரிடத்தில் நடந்த சம்பவத்தை தெரிவித்து கதறி அழுதுள்ளார். பின்னர்,  கலைவாணியை அவரது பெற்றோர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் பாண்டியனை பிடித்து கொலை மிரட்டல், அடித்து துன்புறுத்தல், கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

click me!