சென்னையில் பயங்கரம்.. விசிக பிரமுகர் சல்லி சல்லியாக வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

By vinoth kumarFirst Published Oct 26, 2021, 8:53 AM IST
Highlights

சென்னை சேத்துப்பட்டு அரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107வது வட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சேத்துப்பட்டு மேயர் சிட்டிபாபு தெருவில் இளங்கோவனும் அவரது நண்பர் ஜெயவேலும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட பயங்கர ஆயுதங்களுடன் இளங்கோவனை சரமாரியாக வெட்டினர். 

சென்னையில் முன்விரோதம் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குற்றவாளிகள் 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை சேத்துப்பட்டு அரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107வது வட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சேத்துப்பட்டு மேயர் சிட்டிபாபு தெருவில் இளங்கோவனும் அவரது நண்பர் ஜெயவேலும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட பயங்கர ஆயுதங்களுடன் இளங்கோவனை சரமாரியாக வெட்டினர். 

இதில், சம்பவ இடத்திலேயே இளங்கோவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தின் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளங்கோவன் மற்றும் சஞ்சய் பிரபு ஆகியோருக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரது நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடியவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

click me!