கள்ளக் காதலிக்கு ஒரு மாத பேத்தியை பரிசளித்த முதியவர் கைது - உ.பி.-யில் பரபரப்பு!

By Kevin KaarkiFirst Published Apr 30, 2022, 2:39 PM IST
Highlights

இதன் காரணமாக தனது மகளுக்கு பிறந்த பேத்தியை கடத்தி காதலிக்கு பரிசாக கொடுத்து விடலாம் என முகமது முடிவு செய்தார். 

56 வயதான நபர் தனது மகளுக்கு பிறந்த ஒரு மாத கை குழந்தையை கடத்தி சென்று கள்ளக் காதலிக்கு பரிசாக வழங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

உத்திர பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் பகுதியை சேர்ந்த 56 வயதான முகமது சபர் தினக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகளுக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில், பேத்தியை யாருக்கும் தெரியாமல் தூக்கி வந்த முகமது, ஏற்கனவே திருமணம் ஆன தனது கள்ளக் காதலிக்கு பரிசாக கொடுத்து இருக்கிறார். 

கள்ளக் காதல்:

ஏற்கனவே திருமணமான நிலையில், அந்த பெண்ணிற்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக தான், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக முகமது-இடம் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக தனது மகளுக்கு பிறந்த பேத்தியை கடத்தி காதலிக்கு பரிசாக கொடுத்து விடலாம் என முகமது முடிவு செய்தார். 

இதற்காக பிஜ்னோரின் நகினா பகுதியில் உள்ள மருமகன் வீட்டிற்கு இந்த முகமது சென்றார். அங்கு கஸ்லீம் அகமது தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் உறங்கி கொண்டிருந்தார். திடீரென விழித்து  பார்த்ததும், குழந்தை காணாமல் போனதை கஸ்லீம் அறிந்து கொள்கிறார். இதை அடுத்து காவல் நிலையத்தில் குழந்தை காணாமல் போனது பற்றி புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி. வீடியோ காட்சஇகளை வைத்து முகமது தான் குழந்தையை தூக்கிச் சென்றாக் என்பதை உறுதிப்படுத்தினர்.  

கடும் எதிர்ப்பு:

பேத்தியை முகமது தான் கடத்தினார் என்பதை உறுதிப்படுத்திய பின் காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைதான முகமது சபார், "மூன்று ஆண்டுகளுக்கு முன் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே எனது மகளிடம் ஒரு குழந்தையை கொடுக்கும் படி கேட்டேன், ஆனால் அவர் அதனை கடுமையாக மறுத்துவிட்டார்." என கூறி இருக்கிறார். 

இவரது வாக்குமூலத்தின் பேரில் காவல் துறையினர் முகமது சபார், அவரின் கள்ளக் காதலி மற்றும் காதலியின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கை குழந்தையை பெற்றுக் கொண்டதும் சுமார் 40 வயதான பெண் தனது கணவருடன் அங்கிருந்து பீகார் கிளம்பி சென்று இருக்கிறார். பீகாரில் குழந்தையுடன் தலைமறைவாகி இருக்கும் தம்பதியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

click me!