டாஸ்மாக் ஏல தகராறு.. திமுக வார்டு செயலாளர் ‘காவல் நிலையம்’ அருகே படுகொலை

By Raghupati RFirst Published Jan 30, 2022, 6:48 AM IST
Highlights

பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகே திமுக வார்டு செயலாளர் பொன்னு தாஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலி மாநகரத்தில் திமுக வார்டு செயலாளராக இருப்பவர் பொன்னு தாஸ் என்ற அபே மணி. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று இரவு 11 மணி பாளையங்கோட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம கும்பல் மணியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் பொன்னு தாஸ். 

இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், மணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் டாஸ்மாக் மதுபான பார் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராற்றில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. துணை மேயர் பதவிக்கு முயற்சித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த கொலை காவல் நிலையம் அருகே நடந்து இருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!