மகன் கண்ணெதிரில் இளைஞனுடன் உல்லாசம் அனுபவித்த தாய்... கள்ளக் காதலனை வெறி தீர குத்திய மகன்

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2022, 6:29 PM IST
Highlights

தனது தாயுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்த இளைஞனை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம்  நடந்துள்ளது. இந்த வழக்கில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனது தாயுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்த இளைஞனை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம்  நடந்துள்ளது. இந்த வழக்கில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. கள்ளக்காதலுக்காக குடும்ப கௌரவத்தையும்  தூக்கி எறிய முற்படும்போது, சில நேரங்களில் உயிரை பலி கொடுக்கவும் அல்லது காதலுக்கு தடையாக உள்ளவர்களை கொலை செய்யவது போன்ற குற்றங்கள் அரங்கேறுகிறது. இந்த வரிசையில் பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவருடன் தாய் கள்ள உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த இளைஞனை மகன் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

முழு விவரம் பின்வருமாறு :- பீகார் மாநிலம்  பாட்னாவில் சப் டிவிஷன் இல் உள்ள மாராஞ்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்  மோid என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து தெரிவித்த போலீசார் தகாத உறவு காரணமாக இந்த கொலை அரங்கேறியதாக தெரிவித்தனர். இது குறித்து கொலையில் ஈடுபட்ட பாதல் குமாரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வந்தது.

பாதல் குமாரும் அவரது தாயாரும் ஒரு தனியாக வசித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற இளைஞருடன் அவரது தாயாருக்கு பழக்கம் ஏற்பட்டது பின்னர் அது கள்ளக் காதலாக மாறி, இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். தனது தாயாருடன் மோனு அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வரும் விஷயம் மகன் பாதல் குமாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பாதல் குமார் மோனுவை அழைத்து எச்சரித்தார். இந்த உறவை கைவிட வேண்டும் என கூறினார். ஆனால் அதை மோனு பொருட்படுத்தவில்லை, வழக்கம்போல பாதல் குமாரின் தாயாருடன் மோனு உறவில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாதல் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மோனுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

இந்நிலையில் பாதல் குமாரின் நண்பர்கள் முனுவுடன் சாவகாசமாக பேசியே மது அருந்த அழைத்துச் சென்றனர். அப்போது அனைவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர்,  இடையில் அவர்களுடன் பாதல் குமார் சேர்ந்துகொண்டார். அப்போது போதையில் இருந்த மோனுவை நண்பர்கள் உதவியுடன் பாதல் குமார் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பினர். இந்த தகவல் போலீசாருக்கு தெரிந்து, அவர்கள் விசாரணை நடத்திய நிலையில் கொலை செய்த பாதல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கித் குமார், பஜோ ஆகியோரை கைது செய்தனர். தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த இளைஞனை மகன் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

click me!