வீடியோ கால் வரியா உன்ன பாக்கணும்.. மாணவிகளை மடக்க நினைத்த ஆசிரியருக்கு சரியான ஆப்பு..!

By vinoth kumarFirst Published Jan 7, 2023, 1:31 PM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சாலவேட்டில் அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  200-க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பரணி(57) பணியாற்றி வருகிறார்.

வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாசமாக பேசி மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சாலவேட்டில் அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  200-க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பரணி(57) பணியாற்றி வருகிறார். இவர் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக மாணவிகளுக்கு பாடங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும் செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்கவும் தனியாக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளார். 

இதையும் படிங்க;- கட்டிலில் கட்டிப்புரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்!இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

இந்நிலையில், வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாசமாக பேசி மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் பரணி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் வீடியோ கால் செய்யும் படி தொந்தரவு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் ஆசிரியர் டார்ச்சர் தாங்க முடியாத மாணவிகள் வேறு வழியில்லாமல் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த ஆசிரியர் பரணியை இழுத்து போட்டு தாக்கினர். 

மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆசிரியர் பரணியில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 2 இளம்பெண்கள்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

click me!