நடத்தையில் சந்தேகம்.. தூங்கிக் கொண்டிருந்த மனைவியை துடிதுடிக்க கொன்றுவிட்டு கணவர் என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Oct 21, 2022, 11:14 AM IST
Highlights

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், மகேஸ்வரி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் வரப்பிரகாசம் (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி விசுவாசமேரி (50). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். விசுவாசமேரி அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், தினசரி வீட்டிற்கு தாமதமாக வந்ததால் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

தாம்பரம் அருகே மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு கணவர் தலைமறைவாகி உள்ளார். 

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், மகேஸ்வரி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் வரப்பிரகாசம் (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி விசுவாசமேரி (50). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். விசுவாசமேரி அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், தினசரி வீட்டிற்கு தாமதமாக வந்ததால் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் இரண்டு சகோதரர்களை கரெக்ட் செய்த இளம்பெண்.. எதிர்த்த தந்தை.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

நேற்று முன்தினம் இரவு முழுவதும் இருவருக்கும் இதுதொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். மனைவி மீதான ஆத்திரத்தில் தூங்காத  இருந்த வரபிரசாதம், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த விசுவாச மேரியை அரிவாளால் தலை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வௌத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், போர்வையால் உடலை மூடி வைத்துவிட்டு, வீட்டின் கதவை வெளியே தாழ்ப்பால் போட்டுவிட்டு வரப்பிரகாசம் தப்பி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் வேலைக்கு செல்லும் தாய் வீட்டை விட்டு வெளியே வராததால் அவரை எழுப்புவதற்காக மகள் ஆனந்தி (28) வந்துள்ளார். அப்போது, வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விசுவாசமேரியை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசுவாசமேரி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய வரப்பிரகாசத்தை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;- மிஸ்டு காலில் உருவான கள்ளக்காதல்! புருஷன், பசங்களை உதறி தள்ளிவிட்டு சென்ற பெண்ணின் நிலைமையை பார்த்தீங்களா.?

click me!