சித்தப்பாவிடம் வீட்டுக்குள் வேலையை காட்டிய சகோதரிகள்... குடும்ப மானத்துக்கு பயந்து தாய் செய்த கொடூரம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 25, 2020, 6:28 PM IST
Highlights

இது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என்ற பயத்தில் சிறுமிகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன்

சித்தப்பா பாக்கெட்டில் திருடியதால் திருச்சி அருகே பெற்ற மகள்களுக்கு தாய் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாந்தமீனா. இவர்களுக்கு லோகநாதன் என்கிற மகனும் 13 வயதில் கோகிலா 11 வயதில் லலிதா என்ற இரு பெண்பிள்ளைகள். தனது கணவரின் சகோதர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரின் இரண்டு மகள்களும் வீட்டுக்குள் மயக்கமடைந்து கிடந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமிகள் இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனை அடுத்து சிறுமிகளின் தாய் சாந்தமீனா மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு போலீசாரிடம் சாந்தமீனா அளித்த வாக்குமூலத்தில், ‘நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். எனது கணவரின் சகோதரர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது காணாமல் போனது.

 அதை எனது மகள்தான் எடுத்தனர். இது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என்ற பயத்தில் சிறுமிகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன்’ என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சாந்தமீனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!