ஆசைவார்த்தை கூறி 13 வயது சிறுமியுடன் ஆசைத்தீர உல்லாசம்.. பீச்சில் சில்மிஷத்தின் ஈடுபட்ட போது இளைஞர் கைது.!

By vinoth kumarFirst Published Sep 3, 2022, 8:24 AM IST
Highlights

சென்னை ஆவடியை அடுத்து மிட்டமல்லி கண்டிகை பகுதியை சேர்ந்த சிறுமி (13). அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலேயே சிறுமியின் பெற்றோர் இறந்து விட்டனர்.

சென்னையில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடற்கரைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடியை அடுத்து மிட்டமல்லி கண்டிகை பகுதியை சேர்ந்த சிறுமி (13). அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலேயே சிறுமியின் பெற்றோர் இறந்து விட்டனர். தாத்தா வீட்டில் தங்கி சிறுமி பள்ளிக்கு சென்று வந்தார். தாத்தா பால் வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிறுமி பால் கொண்டு செல்வது வழக்கம்.

இதையும் படிங்க;- பொதுவெளியில் 60 வயது கிழவன் சுய இன்பம்.. நேரில் பார்த்த சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது என்ன தெரியுமா?

கடந்த 30ம் தேதி காலை பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் தாத்தா அதிர்ச்சியடைந்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், சிறுமிக்கு புதிய கண்ணியம்மன் நகர் மோரை பகுதியை சேர்ந்த விக்கி (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே,  இருவரும் சென்னை கடற்கரையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு அளித்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, விக்கி என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தில் விக்கியை கைது செய்து செய்து காவல் துறையினர் அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;-  இரண்டு முறை கள்ளக்காதலனுடன் எஸ்கேப்பான மனைவி.. 3வது முறையாக என்ன நடந்தது தெரியுமா?

click me!