யோகா கத்து தர சொல்லிட்டு.. சிறுமியிடம் அயோக்கியத்தனமாக நடந்த ஆசிரியருக்கு ஆயுள்.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.!

Published : Oct 18, 2022, 07:09 AM ISTUpdated : Oct 18, 2022, 07:12 AM IST
யோகா கத்து தர சொல்லிட்டு.. சிறுமியிடம் அயோக்கியத்தனமாக நடந்த ஆசிரியருக்கு ஆயுள்.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.!

சுருக்கம்

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜேம்ஸ் மரியஞானராஜ். அதே பள்ளியில் படிக்கும் 8 வயது மாணவி, கடந்த 2015 ஜூலை 6-ம் தேதி பள்ளி முடிந்து, யோகா பயிற்சிக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் யோகா கற்றுத்தருவதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜேம்ஸ் மரியஞானராஜ். அதே பள்ளியில் படிக்கும் 8 வயது மாணவி, கடந்த 2015 ஜூலை 6-ம் தேதி பள்ளி முடிந்து, யோகா பயிற்சிக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் யோகா கற்றுத்தருவதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- புல் மப்பில் தகராறு.. தடுக்க முயன்ற காவலர்களை பீர்பாட்டிலால் குத்திய ரவுடியின் நிலைமையை பார்த்தீங்களா?

இதுகுறித்து மாணவி தனது  பெற்றோர்களிடம் கூறியுள்ளாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார், அவரை கைது செய்தனர். பின் யோகா ஆசிரியர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க;-  சிறுவனை மடக்கி உல்லாசம்.. கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி.. 3 மாத கர்ப்பத்தால் அதிர்ச்சி..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!