இன்டர்ன்ஷிப் வந்த மாணவிக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்து கதற கதற பலாத்காரம்..IAS அதிகாரியை அலேக்கா தூக்கிய போலீஸ்

By vinoth kumarFirst Published Jul 7, 2022, 8:48 AM IST
Highlights

இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக சென்ற ஐஐடி மாணவிக்கு மது கொடுத்து அறைக்குள் இழுத்துச் சென்று முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக சென்ற ஐஐடி மாணவிக்கு மது கொடுத்து அறைக்குள் இழுத்துச் சென்று முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் அதிகாரி சையத் ரியாஸ் அகமது.  இவர் இந்திய நிர்வாக சேவையின் 2019 பேட்ச் அதிகாரி. ஐஐடி  மாணவ, மாணவிகள் 8 பேர் குந்தி மாவட்டத்திற்கு இன்டர்ன்ஷிப்புக்காக வந்திருந்தனர். அவர்களை ஐஏஎஸ் அதிகாரியான ரியாஸ் அகமது, தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். அவர்களுக்கு விருந்து கொடுப்பதாகவும் கூறினார். 

இதையும் படிங்க;- என்னுடைய பிள்ளையை பார்க்க விட மாட்டியா? மனைவியை சல்லி சல்லியாய் வெட்டிய கணவர்..தேனியில் பயங்கரம்.!

விருந்துக்கு பின்னர் மது விருந்து நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த மாணவி மீது ஐஏஎஸ் அதிகாரி சையத் ரியாஷ் அகமதுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அந்த பெண்ணுக்கு போதை ஏறியவுடன் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்திருக்கிறார்.  அறைக்குள் இழுத்துச் சென்று  தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி இருக்கிறார்.  அந்த மாணவி அதற்கு மறுக்கவே கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  இதையடுத்து அந்த பெண் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிச் சென்றிருக்கிறார்.   

இதையும் படிங்க;- ஒர்க் ஷாப் வேலைக்கு வந்த 22 வயது இளைஞரை மடக்கிய ஓனரின் மனைவி.. தடையாக இருந்த புருஷனை போட்டு தள்ளிய கொடூரம்.!

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சக மாணவர்களிடம் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் அடுத்த நாள் உள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி ரியாஸ் முகமது மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 509 ஆகிய பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க;-  மச்சினிச்சியை மடக்கிய அக்கா புருஷன்.. லாட்ஜில் ரூம் போட்டு செய்த பகீர் சம்பவம்.. அதிர்ந்துபோன ஊழியர்.!

click me!