பள்ளி மாணவியிடம் நெருங்கி பழகி.. ஆசைதீர உல்லாசம்.. 3 மாதம் கர்ப்பத்தால் வெளியான பகீர்.. கொடூரனை தூக்கிய போலீஸ்

By vinoth kumarFirst Published Mar 21, 2023, 8:43 AM IST
Highlights

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். திடீரென அவருக்கு வாந்தி மயக்கம் மற்றும் உடல் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனால், மகளுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ பதறிய பெற்றோர் அப்பகுதியில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். திடீரென அவருக்கு வாந்தி மயக்கம் மற்றும் உடல் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனால், மகளுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ பதறிய பெற்றோர் அப்பகுதியில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க;- ஸ்பா சென்டர் என்ற பெயரில் விபச்சாரம்.! போட்டா போட்டி போட்ட இளைஞர்கள்.. அறைகுரை ஆடைகளுடன் சிக்கிய இளம்பெண்கள்.!

இதை சற்றும் எதிர்பாராத பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்த போது கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (21)  என்பவர் என்னிடம் நட்பாக பேசி, அடிக்கடி பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்து நெருகி பழகி வந்ததாகவும், ஆசைவார்த்தை கூறி என்னை பலாத்காரம் செய்ததாக கதறிய படி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- உனக்கு கல்யாணம் ஆனாலும்!நான் கூப்பிடும் போது வந்து என்னுடன் உல்லாசமாக இருக்கணும்! கதறியும் விடாத காமக்கொடூரன்

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவன் லோகநாதனை போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!