ஓயாமல் மனைவியின் அந்தரங்கத்தில் ஆர்வம்.. சைகோ கணவன் செய்த பயங்கரம்.. தலையில் அடித்து தூக்கிச் சென்ற போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2021, 10:14 AM IST
Highlights

வைகளை அறிந்து கொண்டு அவரின் கணவர், நீ ஏன் அவருடன் பேசுகிறாய், ஏன் இப்படி பேசுகிறாய் எனக்கூறி அந்தப் பெண்ணின்  நடத்தையில் சந்தேகம் அடைந்து வந்தார்.

மனைவியின் செல்போனில் கண்காணிப்பு செயலியை நிறுவி, அவர் யாருடன் பேசுகிறார், அவர் செல்போனில் என்ன மெசேஜ் அனுப்புகிறார் என்பன உள்ளிட்ட அந்தரங்கங்களை கண்காணித்து வந்த கணவன் மீது  மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர். ஆயிரம்தான் கணவன் மனைவி உறவாகவே இருந்தாலும், ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொருவருக்கும் தனிமனித சுதந்திரம் என்பது இன்றியமையாதது. எத்தகைய உறவாக இருந்தாலும் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லை உள்ளது. இந்த சுதந்திர உணர்வு அவர்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான காரணியாகவும் அமையக்கூடும். 

ஆனால் இங்கு ஒரு நபர் தனது மனைவியின் மொத்த செயல்பாடுகளையும் இன்ச் இன்சாக கண்காணிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ள சம்பவம் அவரது வாழ்க்கைக்கே விணையாக வந்து முடிந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்திலுள்ள கொருட்லாவில்தான் இப்படியான ஒரு  சம்பவம் நடந்துள்ளது. கெருட்லாவில் டி நரசிம்மாச்சலம் (48) தனது மனைவி அனிதாவின் போனில் சில மாதங்களுக்கு முன்னர் ரகசிய உறவு செயலி ஒன்றை நிறுவினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு இது தெரியாதே, இந்த செயலியின் மூலம் அந்தப் பெண் எங்கு செல்கிறார், அவர் யாருடன் பேசுகிறார், அவர் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்புகிறார் என்பன உள்ளிட்ட எல்லாவற்றையும் அந்த செயலி மூலம் அவர் நோட்டமிட்டு வந்துள்ளார். தன் கைபேசி மொத்தமும் கணவனால் கண்காணிக்கப்படுகிறது என்பதை தெரியாமலேயே அந்தப் பெண் தனக்கு விருப்பமான நபர்களுடன் உரையாடியும், மெசேஜ் அனுப்பியும் வந்துள்ளார். 

அவைகளை அறிந்து கொண்டு அவரின் கணவர், நீ ஏன் அவருடன் பேசுகிறாய், ஏன் இப்படி பேசுகிறாய் எனக்கூறி அந்தப் பெண்ணின் நடத்தையில் சந்தேகம் அடைந்து வந்தார். இது ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே பிரச்சினையாக உருவெடுத்தது, தனது செல்போனில் உள்ள செயலி மூலம் தனது ரகசியங்களை அறிந்து கொண்டு தனது கணவர் சண்டையிட்டு வருவதை அறிந்து கொண்ட அந்த பெண் கடந்த புதன்கிழமை அன்று தனது கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அனிதாவின் கணவர் நரசிம்மாசலத்தை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் போது அவர், தன் மனைவி அனிதாவின் செல்போனில் ரகசிய செயலி நிறுவியதை ஒப்புக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது வீட்டிலிருந்த தங்க நகை காணாமல் போனதாகவும், அதுகுறித்து தனது உறவினர்கள் மற்றும் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதாலும், தான் இப்படி நடந்து கொண்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். 

அதேபோல அவருக்கு நெருக்கமான இரண்டு உறவினர்களின் செல்போனிலும் இதேபோன்ற செயலியை நிறுவியதையும் ஒப்புக் கொண்டார். பின்னர் அவர்களின் செல்போன்களில் இருந்து அந்த செயலி நீக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 498 மற்றும் 354c பிரிவுகளின் கீழ் நரசிம்மாச்சலம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கணவனே மனைவியின் சந்தேகக் கண்ணுடன் அவரின் அந்தரங்கங்களை நோட்டமிட்டு வந்த சம்பவம் காவல் நிலையம் வரை சென்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!