நம்பி வீட்டுக்குள் சேர்த்தது ஒரு குத்தமா? மயங்க மருந்து கொடுத்து நண்பனின் மனைவியை கர்ப்பமாக்கிய கொடூரன்.!

By vinoth kumarFirst Published Oct 29, 2021, 7:47 PM IST
Highlights

அவரை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாரிடமும் சொல்ல வேண்டாம் என மிரட்டி விட்டு சென்றார். இதில், அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பில் கண்ணணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்டபோது நடந்த விவரங்களை கணவரிடம் தெரிவித்துள்ளார். 

கோவையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் தனது 40 வயது மனைவியுடன் கோவையில் தங்கியிருந்து கார்மென்ட்ஸ் தொழில் செய்து வந்தார். அவரது குடும்ப நண்பர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 45 வயது நபரும் பார்ட்னராக இருந்தார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. தொழில் நிமித்தமாக கண்ணன் வீட்டுக்கு அவரது நண்பர் அடிக்கடி சென்று வந்தார். அப்போது கண்ணனின் மனைவி அவருடன் சகஜமாக பேசி பழகியுள்ளார். அப்போது நண்பரின் மனைவி மீது மோகம் கொண்ட அந்த நபர் அவரை அபகரித்து தனது வலையில் வீழ்த்த முயன்றார்.

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்... 21 வயது இளம் பெண்கள் மீட்பு..!

 அதற்கான சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என காத்திருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று தொழில் ரீதியாக பேசுவதற்கு கண்ணன் வீட்டுக்கு அவர் நண்பர் சென்ற போது வீட்டில் கண்ணன் இல்லை. அவரது மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது தனது ஆசையை பூர்த்தி செய்ய நண்பர் திட்டம் போட்டார். அந்த பெண் குடிப்பதற்காக கொடுத்த குளிர்பானத்தில் அவருக்குத் தெரியாமல் மயக்க மருந்தை கலந்துள்ளார். பின்னர் தான் வேறொரு குளிர்பானத்தை குடித்து விட்டு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்த சிறிது நேரத்தில் அவர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். 

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசம்... நேரில் பார்த்த மனைவி.. அப்புறம் ஏட்டுக்கு நடுரோட்டில் நடந்த தரமான சம்பவம்.!

பின்னர்,  அவரை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாரிடமும் சொல்ல வேண்டாம் என மிரட்டி விட்டு சென்றார். இதில், அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பில் கண்ணணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்டபோது நடந்த விவரங்களை கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கண்ணன் நயவஞ்சமாக பழகி தனது மனைவியைஅபகரித்த நண்பனிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர் தனது தந்தையுடன் சேர்ந்து அவரை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் கண்ணனின் நண்பன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரின் மனைவியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதையும் படிங்க;-தோப்பில் நிர்வாண நிலையில் உல்லாசம்.. கையும் களவுமாக பிடித்த கணவர்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!

click me!