குடிபோதையில் 3 பொண்டாட்டிக்காரர் படுகொலை.. கல்லால் தாக்கியே அண்ணனை கொன்ற தம்பி..அதிர்ச்சி சம்பவம் !

Published : Apr 25, 2022, 12:07 PM IST
குடிபோதையில் 3 பொண்டாட்டிக்காரர் படுகொலை.. கல்லால் தாக்கியே அண்ணனை கொன்ற தம்பி..அதிர்ச்சி சம்பவம் !

சுருக்கம்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி முத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணியன். இவருடைய மகன்கள் சிவகேசன் (வயது 40), வெங்கடேசன் (38). 2 பேரும் தொழிலாளர்கள். மூத்த மகன் சிவகேசனுக்கு 3 பொண்டாட்டிகள் இருந்தனர். 

இதில் முதல் மனைவி சத்யா இறந்து விட்டார். இதையடுத்து பாண்டியம்மா, ராதா ஆகியோரை சிவகேசன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. முதல் மனைவி சத்யாவுக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் சிவகேசனின் தந்தை மணியன் வீட்டில் வசித்து வருகின்றனர். வெங்கடேசனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அண்ணன்-தம்பி இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.

சிவகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இரவு சிவகேசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. 2 பேரும் மாறி, மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அங்கே கிடந்த கல்லால், அண்ணன் சிவகேசனை தாக்கினார். மேலும் அவரது தலையில் கல்லால் குத்தினார். இதில் சிவகேசன் பலத்த காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக தொளசம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவகேசன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். பின்னர் சிவகேசனை கொலை செய்த வெங்கடேசனை கைது செய்தனர். ஓமலூர் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணனை, தம்பி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ஓகே சொன்ன கே.சி.ஆர்.. ஹேப்பியான பிரசாந்த் கிஷோர்.! அப்போ காங்கிரஸ் கதி ‘அவ்ளோதானா’ ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!