திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்; பெண் வீட்டார் கதறல்

By Velmurugan sFirst Published Jun 1, 2023, 10:48 AM IST
Highlights

கோவை மாவட்டத்தில் வேறொரு பெண்ணுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கணைவனை கண்டித்த காதல் மனைவியை திருமணமான ஒரே மாத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை சிறுவாணி சாலையில் உள்ள மத்தவராயபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி என்ற இளம் பெண்ணை கடந்த மாதம் 8ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை ரமணியின் பெற்றோர் ஏற்கவில்லை. சஞ்சையின் பெற்றோர் ஏற்றுக் கொண்டதால் புதுமணத் தம்பதி சஞ்சயின் பெற்றோருடன் அவர்களது வீட்டில் வசித்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த 29ம் தேதி ரமணி மூச்சு திணறலுடன் படுக்கை அறையில் கிடந்ததாக கூறி புலுவாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கணவர் கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் ஏற்கனவே ரமணி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

காவல் அதிகாரி என கூறிக்கொண்டு கடைகளில் வசூல் வேட்டை நடத்திய போலி ஆசாமி கைது

இதற்கிடையே ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரை அடித்து கொலை செய்து விட்டனர் என்றும் உறவினர்கள் ரமணியின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர். மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த ரமணியின் கழுத்து, கையில் காயம் இருப்பதாக கூறப்பட்டது. 

எனவே இது தொடர்பாக ஆலந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வந்தார். மேலும் மருத்துவர்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையைத் தொடர்ந்து ரமணியின் கணவர் சஞ்சயிடம் பேரூர் காவல்துறை துணை ஆணையர் ராஜபாண்டி விசாரணை நடத்தினார். அத்துடன் ரமணியின் தந்தை சஞ்சய் தந்தை மற்றும் தாய் ஆகியோரிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.  

சேலத்தில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் வரதட்சணை கொடுமை; இளம்பெண் தர்ணா

துணை ஆணையர் ராஜபாண்டியின் தீவிர விசாரணையில் புதுப்பெண், கணவர் சஞ்சய் மனைவி ரமணியின் கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. திருமணம் முடிந்த நிலையில் சஞ்சய் வேறொரு பெண்ணுடன் போனில் பேசி வந்துள்ளார். இது குறித்து சம்பவத்தன்று கணவனுக்கும், மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

ஆத்திரமடைந்த சஞ்சய் மனைவி ரமணியின் கழுத்தை பிடித்து நெரித்து உள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறும் போது மகனின் கொலையை மறைக்க ரமணியின் வாயில் சாணி பவுடரை தெளித்து தற்கொலை செய்தது போல் நாடகமாடி உள்ளனர். இந்த தகவல் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சஞ்சய், அவருடைய தந்தை லட்சுமணன், தாய் அம்முகுட்டி என்ற பக்ரு நிஷா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

click me!