அடத்தூ.. அத்தையுடன் ஏற்பட்ட விபரீத காதல், தனிமையில் அடிக்கடி உல்லாசம்.. மருமகன் அடித்துக் கொலை.

By Ezhilarasan BabuFirst Published May 24, 2022, 7:09 PM IST
Highlights

அத்தையுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மருமகனை அத்தையின் கணவர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

அத்தையுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மருமகனை அத்தையின் கணவர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக்காதலை அடிப்படையாக வைத்தே நடந்து வருகிறது. பலர் திருமண வாழ்க்கையை மீறி வைத்துக் கொள்ளும் உறவுகள் இதுபோன்ற விபரீதங்களில் முடிவதை பரவலாக காண முடிகிறது. அத்தை, அண்ணி, தங்கை என சிலர் உறவு முறைகளை மீறி உல்லாசத்தில் ஈடுபடும் சம்பவங்களும் சமூகத்தில் பரவலாக அதிகரித்துள்ளது. அப்படியான  ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது, அத்தையுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மருமகன் மாமனால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தான் அது. ராஜஸ்தான் மாநிலம்  பினாகரை சேர்ந்தவர் உத்ரம் மேக்வால், இவரது மனைவி கௌரா தேவி, இவர் குஷன் ராமின் அத்தை ஆவார்.  

இந்நிலையில்  குஷல் ராமுக்கு தனது அத்தையின் மீது பாலியல் ஈர்ப்பு ஏற்பட்டது, இதனையடுத்து அவர் அத்தையுடன் நெருங்கி பழகி வந்தார், அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர். மாமன் உதரம் மேக்வால் வீட்டில் இல்லாத நேரங்களில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் தனது மனைவியின் நடத்தையில் உத்ரமுக்கு சந்தேகம் ஏற்பட்டது, இந்நிலையில் மனைவியுடன் குஷல்ராம் கள்ள உறவில் இருப்பது தெரிந்தது மனைவியை அவர் கண்டித்தார். அதேநேரத்தில் குஷல்ராம் மீது கடும் கோபத்திற்கு ஆளான உத்ரம், குஷல் ராமை கொல்ல திட்டமிட்டார், இதனையடுத்து தனது நிலத்திற்கு வருமாறு குஷல் ராம அழைத்தார் உதரம், மாமன் அழைக்கிறாரே என நம்பிவந்த குஷால் ராமை உத்ரம் அடித்துக் கொலை செய்தார்.

கொலைக்குப் பிறகு தனது குஷல்ராமின் உடலை ஒட்டகத்தின் மீது ஏற்றி கிராமத்தில் ஒதுக்குப்புற சாலையில் வீசினார், திடீரென குஷல்ராம் சாலையோரத்தில் சடலமாக கிடப்பதை ஊர் மக்கள் பார்த்து அதிர்ந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர்  சாலையோரத்தில் சடலமாக கிடந்த மகனை கண்டு கதறினர். உத்திரம் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது, அப்போது உத்ரமுக்கு எதிராக தகராறில் ஈடுபட்டனர். இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்தது, உத்ரம் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் சிறிது நேரம் அவர் போலீசாருக்கு தவறாக தகவ்லகளை கூறி தப்பிக்க முயன்றார்.

ஆனால் போலீசார் தங்களது பாணியல் விசாரித்தனர், அப்போது குஷல்ராமை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதை அறிந்த உத்ராமின் மனைவி கௌரவ் தேவி கடந்த திங்கட்கிழமை ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.உத்ரமை கொலை வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர், கௌரவ தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞன் அடித்து கொலை செய்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பினாகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

click me!