அண்ணன் இறந்த கையோடு அண்ணிக்கு பயங்கர டார்ச்சர்.. டேமுக்கு தூக்கிச் சென்று மைத்துனன் செய்த காரியம்.

By Ezhilarasan BabuFirst Published May 24, 2022, 5:27 PM IST
Highlights

டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அண்ணியின் சடலத்தை டேமில் வீசிய  மைத்துனனை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தெலுங்கானா மாநிலம் விக்ரமாபாத்தில் நடந்துள்ளது.

டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அண்ணியின் சடலத்தை டேமில் வீசிய  மைத்துனனை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தெலுங்கானா மாநிலம் விக்ரமாபாத்தில் நடந்துள்ளது.

பணமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. உறவுகளையும் கூட அதைப் பொறுத்துத்தான் உள்ளது. பணத்திற்காக சொத்துக்காக நெருங்கிய சொந்தங்களை கூட கொலை செய்யும் அளவிற்கு துணியும் கொடூரங்கள் ஆங்காங்கே பரவலாக அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் அண்ணன் இறந்த கையோடு அண்ணனின் சொத்தை அபகரிக்க அண்ணியை டார்ச்சர் செய்து மைத்துனன் தற்கொலைக்குத் தூண்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த விக்ராபாத்  மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. விக்ராபாத் மோமின்பேட்டை,  அமராதிகாலன்  கிராமத்தை சேர்ந்தவர் ஆசையா, இவரது மனைவி  சங்கமணி, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசையா உயிரிழந்தார், தனது இரண்டு மகள்களுடன் சங்கமணி தனது விவசாய நிலத்தில் பயிர் செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில் ஆசையா தம்பி ஸ்ரீநிவாசுக்கும் அண்ணி சங்கமணி இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. அண்ணன் இறந்த கையோடு அவருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தையும் அபகரிக்க ஸ்ரீனிவாஸ் முயற்சித்தார். நிலம் முழுவதும் தனக்கே சொந்தம் எனக்கூறி அண்ணி சங்கமணியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார், தனது தந்தை அனைத்து சொத்தையும் தனக்கே எழுதி வைத்து விட்டதாகவும் கூறி அவர்களை துன்புறுத்தினார், இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி மரடி சீனிவாஸ் கொடுத்த சித்திரவதையை தாங்க முடியாமல், தங்கமணி விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வயலில் உள்ள கிணற்றில் அண்ணி சடலமாக இருப்பதை பார்த்த ஸ்ரீநிவாஸ் சொத்துக்கள் மொத்தமும் அபகரிக்கும் நோக்கில் கிணற்றில் இருந்த அண்ணியின் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தின் மூலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சிங்கூர் அணையில் வீசினார்.

யாருக்கும் தெரியாமல் இந்த காரியத்தை அவர் செய்து முடித்தார். இந்நிலையில் நிலத்திற்கு சென்ற தாய் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள்  தாயை தேடினர். எங்கு தேடியும் தாய் சங்கமணியை காணாததால் மகள்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீனிவாஸ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது, ஸ்ரீனிவாசை காவல் நிலையம் தூக்கிச்சென்று தங்களது பாணியில் விசாரித்தனர். அப்போது குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஸ்ரீனிவாஸ் அண்ணன் இறந்த கையோடு அவருக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இப்படி நடந்து கொண்டதாகக் கூறினார். பின்னர் அண்ணியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஸ்ரீனிவாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 

click me!