வாய்ப்பாடு சொல்லாததால் ஆத்திரம்.. மாணவன் கையில் ட்ரில்லிங் மெஷினால் ஓட்டை போட்ட கொடூர ஆசிரியர்..!

By vinoth kumarFirst Published Nov 28, 2022, 3:24 PM IST
Highlights

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் பிரேம்நகர் என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிசாமாவ் 2ம் வாய்பாட்டை ஒழுங்காக சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. 

வாய்ப்பாடு சொல்லவில்லை என்பதற்காக 5ம் வகுப்பு மாணவனின் கையில் ஆசிரியர் ஒருவர் ட்ரில்லிங் மெஷினால் ஓட்டை ஓட்டை போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் பிரேம்நகர் என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிசாமாவ் 2ம் வாய்பாட்டை ஒழுங்காக சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் மாணவனின் இடது கையில் டிரில்லிங் மிசின் கொண்டு துளையிட்டுள்ளார். 

இதையும் படிங்க;- வேலைக்காரியுடன் வெறித்தனமாக உல்லாசமாக இருந்த போது மாரடைப்பு.. பரிதாபமாக உயிரிழந்த தொழிலதிபர்..!

இதனால் அந்த பள்ளி மாணவன் வலி தாங்க முடியாமல் ரத்தம் சொட்ட சொட்ட துடித்துள்ளார். இதனை கண்ட சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த மகள்.. துடிதுடிக்க கொன்ற தாய்.. இறுதி அவர் என்ன செய்தார் தெரியுமா?

click me!