வேலைக்காரியுடன் வெறித்தனமாக உல்லாசமாக இருந்த போது மாரடைப்பு.. பரிதாபமாக உயிரிழந்த தொழிலதிபர்..!

By vinoth kumarFirst Published Nov 25, 2022, 2:01 PM IST
Highlights

தொழிலதிபர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலைக்காரியுடன் உல்லாசமாக இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது. 

தொழிலதிபர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலைக்காரியுடன் உல்லாசமாக இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் பாலசுப்ரமணியன் (67). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான இவர் தனது மகன், மருமகளுடன் வசித்து வந்தார். கடந்த 16ம் தேதி வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, பாலசுப்பிரமணியன் சாலையில் சடலமாக கிடந்துள்ளார். உடலில் எந்தத காயமும் இல்லாமல் போர்வை, பிளாஸ்டிக் பைகள் சுற்றப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- ஓவர் நடிப்பு உடம்புக்கு ஆகாது.. கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி.. போலீசில் வசமாக சிக்கியது எப்படி?

இதனையடுத்து, அவரது செல்போனை ஆய்வு செய்த போது நீண்ட நேரம் பெண் ஒருவரிடம் அடிக்கடி நீண்ட நேரம் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதில், பாலசுப்ரமணியனுக்கும், அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி வேலைக்காரி வீட்டிற்கு சென்ற பாலசுப்பிரமணியன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால், பதறிப்போன பெண் நடந்தவற்றை கணவரிடம் கூறியுள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்த கணவர் உடலை பிளாஸ்டிக் பையால் சுற்றி சாலையோரம் வீசி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வேலைக்காரி மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர ரூம் போட்டு உல்லாசம்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.. கதறும் இளம்பெண்.!

click me!