யாழ்பல்கலைக் கழகத்தில் மாணவிகளை நிர்வாணப்படுத்தும் மாணவர்கள்..!! எப்படியெல்லாம் மாணவிகள் கற்பழிக்கப்படுகிறார்கள் விளக்குகிறார்கள் சமூக அர்வலர்கள்.

By Thiraviaraj RMFirst Published Feb 7, 2020, 11:17 AM IST
Highlights

யாழ் நகரப்பகுதியில் டியுசனுக்கு சென்ற மாணவி அங்குள்ள நடைபாதைக் கடையில் பொருள்களை விற்கும் ஒருவன் தான் மருத்துவக்கல்லூரியில் படிப்பதாக கூறி அந்த மாணவியை காதலிப்பது போல் நடித்து அவளை அவனின் காம உணர்ச்சி உடலறவு வைத்து கொண்டான். அந்த உடலுறவையும் ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடித்து தன்னுடைய நண்பர்களுக்கும் காட்டியிருக்கிறான். அந்த வீடியோ காட்சிகளை அந்த மாணவியிடம் காட்டி மிரட்டி நண்பர்களுக்கு இறையாக்கிய சம்பவம் அங்கே அரங்கேறியிருக்கிறது.
யாழ்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியின் ஒருவருக்கு அங்கு மூன்றாம் ஆண்டு படித்த மாணவன் ஒருவன் தான் சுய இன்பம் செய்வதை வாட்ஸ்அப் மூலமாக படம் பிடித்து லைவ்வாக அனுப்பியிருக்கிறான். அதைப்பார்த்த அந்த மாணவியிடம் நீயும் இதை போல் உன்னை செய் என்று சொல்லி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் ராக்கிங் கொடுமையால் மாணவி தற்கொலைக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அரங்கேறிக்கொண்டே வருகிறன்றது.. 
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கட்டுக்கடங்காமல்  ராக்கிங் பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. என்ன தான் கடுமையான சட்டதிட்டங்கள் கல்வித்துறை கொண்டு வந்தாலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால்  பெண்கள் கற்பை மாணவர்கள் சூறையாடும் சம்பவம் வேதனையாக இருக்கிறது.


யாழ்பாண பல்கலைக்கழக மாணவிக்கு எப்படியெல்லாம் ராக்கிங் பாலியல் தொந்தரவு நடந்தது என்பதை விளக்கியிருக்கிறார்கள் அங்குள்ள சமூக ஆர்வலர்கள்.
“யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்த மாணவிகளின் மொபைல் எண்களை பழைய மாணவர்கள் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள். வாட்ஸ் அப் குழு அமைத்து அந்த குழுவில் புதிய மாணவிகளையும் சேர்த்துவிடுகிறார்கள். பிறகு நண்பர்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு மாணவிகளை மிரட்டி நிர்வாணமாகவும் அரைகுறையாகவும் தங்களை படமெடுத்து அனுப்ப வேண்டும் என்று மிரட்டி வருகிறார்கள் . வாட்ஸ் அப் எண்ணிற்கு உடலுறவு செய்யும் ;வீடியோ நிர்வாண படங்கள் என அனுப்பி மாணவிகளின் பாலுணர்ச்சியை முதலில் தூண்டிகிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு எப்படி கல்லூரிக்கு சென்று அவர்களின் முகத்தை பார்த்துக்கொண்டு போக முடியும் . எதற்கு வம்பு என்று நினைத்து ஒரு சில மாணவிகள் ஒதுங்வதும் அவர்களுக்கு ஒத்துப்போவதும் உண்டு. 


.தற்கொலைக்கு முயன்ற மாணவியிக்கு போன் செய்து அவளிடம் உன் நிர்வாணப்படத்தை அனுப்பு இல்லையெனில் கல்லூரியில் உன்னை அசிங்கப்படுத்தி விடுவோம்.அதையெல்லாம் வீடியோவாக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றெல்லாம் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.
உடனே அந்த மாணவி தன் அப்பாவிடம் வாட்ஸ் அப்பில் வந்த அத்தனை காமலீலை படங்களை காட்டியிருக்கிறார். இதையெல்லாம் கண்ட அந்த மாணவியின் தந்தை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கிறார். இது யாழ்பல்கலைக்கழகம் கல்லூரியில் முதல் முறையாக நடப்பது அல்ல. பலமுறை இப்படி நடந்திருக்கிறது. பல மாணவிகளின் கற்பு கதற கதற அரங்கேறியிருக்கிறது. அந்த காம கொடூர கும்பல் செய்த காரியத்தால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்யும் அளவிற்கு இறங்கியிருக்கிறார்.
மேலும் தொடர்ந்து  பேசிய சமூக ஆர்வலர்கள்..


யாழ் நகரப்பகுதியில் டியுசனுக்கு சென்ற மாணவி அங்குள்ள நடைபாதைக் கடையில் பொருள்களை விற்கும் ஒருவன் தான் மருத்துவக்கல்லூரியில் படிப்பதாக கூறி அந்த மாணவியை காதலிப்பது போல் நடித்து அவளை அவனின் காம உணர்ச்சி உடலறவு வைத்து கொண்டான். அந்த உடலுறவையும் ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடித்து தன்னுடைய நண்பர்களுக்கும் காட்டியிருக்கிறான். அந்த வீடியோ காட்சிகளை அந்த மாணவியிடம் காட்டி மிரட்டி நண்பர்களுக்கு இறையாக்கிய சம்பவம் அங்கே அரங்கேறியிருக்கிறது.
யாழ்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியின் ஒருவருக்கு அங்கு மூன்றாம் ஆண்டு படித்த மாணவன் ஒருவன் தான் சுய இன்பம் செய்வதை வாட்ஸ்அப் மூலமாக படம் பிடித்து லைவ்வாக அனுப்பியிருக்கிறான். அதைப்பார்த்த அந்த மாணவியிடம் நீயும் இதை போல் உன்னை செய் என்று சொல்லி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சமீபத்தில் கல்லூரி படிக்கும் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி இதுவரை எதற்காக இறந்தார் என்று அவளின் பெற்றோர் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் போலீசார் அவள் பயன்படுத்திய ஸ்மார்ட் போனை கைப்பற்றி அதை செக் செய்த போது மாணவர் ஒருவர் வேறொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த மாணவிக்கும் பாலியல் தொந்தரவு நடந்திருக்கலாம் என்கிற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்புக்காக செல்போன் கொடுக்கிறார்கள் ஆனால் அந்த போன் பாலியல் பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது.என்கிறார்கள்.


யாழ்பாணத்தில் இளம் பெண்கள் மாணவிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படும் அதற்காக மாணவிகள் தற்கொலைக்கு செல்லுவதும் தொடர்கதையாகவே ஆக்டோபஸ் கைகள் போன்று நீண்டு கொண்டே போகிறது. இந்த கொடுமைகள் எல்லாம் பத்துஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று இணையத்தில் யாழ்பாணமக்கள் கேப்டன் பிரபாகரனை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

TBalamurukan

click me!