நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

Published : Jan 03, 2023, 05:41 PM IST
நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

சுருக்கம்

அத்தையுடன் மருமகன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக வித்தியாசமான புகார் ஒன்று போலீசுக்கு கிடைத்தது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில் இருந்து வித்தியாசமான புகார் ஒன்று போலீசுக்கு கிடைத்தது. அனாதரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சியாகார கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மொத்தம் மூன்று மகள்கள் உள்ளனர்.

ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஸ்னாவை, நாராயண் ஜோகி என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் நாராயண் ஜோகி தனது அத்தையுடன், அதாவது மாமியாருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாமியாரும், மருமகனும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து மாமனார் போலீசில் புகார் அளிக்க இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையும் படிங்க..Video : சுமார் 360 அடி உயரம்; உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற பெண் - பதறவைக்கும் வீடியோ

போலீசிடம் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, திருமணத்திற்குப் பிறகு, அவரது மகள் மற்றும் மருமகன் நாராயண் ஜோகி மாமனார் வீட்டிற்கு செல்வது வழக்கம்.  நாராயண் ஜோகி டிசம்பர் 30, 2022 அன்று சியாகாராவிற்கு வந்திருந்தார். அதே நேரத்தில், ஒவ்வொரு மாமனார் ரமேஷ் மற்றும் மருமகன் நாராயண் இருவரும் கூடுதலாக மதுபானம் அருந்தினர் என்று கூறப்படுகிறது.

பிறகு அடுத்த நாள் இருவரையும் காணாததால், அங்கும் இங்கும் தேடினார். பிறகு தான் இருவரும் ஓடிவிட்டனர் என்று தெரிய வந்தது. மருமகன் தனது மனைவியை மயக்கி அழைத்துச் சென்றதாக மருமகன் மீது ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், அனந்தரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Swiggy : புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி