கண்ணை மறைத்த காமம் !! கள்ளக் காதலைத் தொடர பாம்பை விட்டு கடிக்கவிட்டு மாமியாரைக் கொன்ற மருமகள் !!

By Selvanayagam PFirst Published Jan 10, 2020, 9:38 PM IST
Highlights

ராஜஸ்தானில் இளம் பெண் ஒருவர் தனது கள்ளக் காதலை தட்டி கேட்ட மாமியாரை பாம்பை விட்டு கடிக்கவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு, கள்ளக் காதல்,  தனிக்குடித்தனம், மாமியார்- மருமகள் பிரச்சினை, என குடுப்ங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைக்கு தற்போது கொலை தான் தீர்வாக மாறிப்போனது. பிடிக்காத மாமியாரை  மருமகள் அடித்து கொல்வது, ஆள் வைத்து கொலை செய்வது, கடித்துக் குதறி கொலை செய்வது என மருமகள்கள்  அவ்வப்போது டிசைன், டிசைனாக கொன்ற வருகின்றனர்.
  
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அந்த இளம் பெண் ஒருவர் தனது மாமியாரை கிரிமினல் தனமாக யோசித்து கொலை செய்துள்ளார். 

அந்தப் பெண்ணின் கணவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனது மாமியாருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த அவருக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது. அவர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லசமாக இருந்துள்ளனர்.

மேலும் மருமகள் அந்த இளைஞருடன் பல மணிநேரம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதை கவனித்து வந்த மாமியார் மருமகளை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். 

தனது கள்ளக்காதலனிடம் கூறி  பாம்பை வாங்கி வரச்செய்து மாமியார் தங்கி இருந்த அறைக்குள் விட்டுள்ளார். இதில்  பாம்பு கடித்து மாமியார் இறந்துள்ளார். ஆனால், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறியதை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நடந்த உண்மையை மருமகள் கூறியுள்ளார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த பெண் மற்றும் அவரது கள்ளக் காதலன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!